இதை மட்டும் ஸ்டாலின் பேசினா ரொம்ப நல்லா இருக்கும்.. டெல்லி மீட்டிங்கில் எகிறவைக்கும் எதிர்பார்ப்பு!
Recommended Video
டெல்லி: எதிர்க்கட்சிகள் இன்று நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காவிரி பிரச்சனை குறித்து பேசுவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அவர் மேகதாது திட்டம் குறித்து டெல்லியில் பேசுவாரா என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். இன்று டெல்லியில் எதிர்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்த பாஜகவிற்கு எதிராக மாபெரும் கூட்டணி அமைக்க உள்ளது.
இதில் 2019 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்க இருக்கிறார்கள்.
முக்கியம்
ஆனால் இந்த சந்திப்பில் கூட்டணி குறித்து மட்டுமில்லாமல், பொது பிரச்சனைகள் குறித்தும் பேச இருக்கிறார்கள். இதில் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். ரஃபேல் ஊழல், ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, விலையேற்றம் பற்றி ஆலோசிக்க திட்டமிட்டு உள்ளனர்.
ஸ்டாலின் பேசுவாரா?
இந்த நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஸ்டாலின் காவிரி பிரச்சனை குறித்து பேசுவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த கூட்டத்தில்தான் கர்நாடக முதல்வர் குமாரசாமி கலந்து கொள்ள இருக்கிறார். இதில் சோனியா காந்தியும் கலந்து கொண்டு இருப்பார் என்பதால், இவர்கள் காவிரி பிரச்சனை குறித்து பேசுவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.
அழுத்தம் கொடுக்கலாம்
இதில் ஸ்டாலின் மஜதவிற்கு நிறைய வகைகளில் அழுத்தம் கொடுக்க முடியும். மஜத, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் துணையுடன்தான் ஆட்சி நடத்தி வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி மூலம் மேகதாது திட்டத்திற்கு எதிராக கர்நாடகாவிற்கு அழுத்தம் கொடுக்க முடியும். ஏன் நேரடியாகவே கூட குமாரசாமியிடம் ஸ்டாலின் விவசாயிகளின் கஷ்டம் குறித்து பேசலாம்.
நல்ல பெயர்
ஒருவேளை ஸ்டாலின் நேரடியாக பிரச்சனை குறித்து பேசினால் கூட அது பெரிய அளவில் அவருக்கு நற்பெயரை பெற்றுக்கொடுக்கும். இந்த பிரச்னைக்கு தீர்வு இந்த ஒரே சந்திப்பில் கிடைக்கவில்லை என்றால் கூட, இதுதான் தமிழக மக்களின் பிரச்சனை என்று அனைத்து மாநில கட்சிகளுக்கும் ஸ்டாலின் மூலம் தெரிய வந்தாலே சிறப்பாக இருக்கும். அதை ஸ்டாலின் செய்வாரா என்பதை தெரிந்து கொள்ள மாலை வரை காத்திருக்க வேண்டும்!