மகாராஷ்டிரா நம்பிக்கை வாக்கெடுப்பு.. முறைகேட்டை தவிர்க்க 4 முக்கிய நிபந்தனை.. உச்சநீதிமன்றம் அதிரடி
Recommended Video
டெல்லி: மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை மாலை 5 மணிக்குள், பட்னாவிஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இன்று வழங்கிய தீர்ப்பில், நம்பிக்கை வாக்கெடுப்பு நியாயமாக நடைபெற சில நிபந்தனைகளை விதித்துள்ளது நீதிமன்றம்.

அந்த முக்கிய நிபந்தனைகள் இவைதான்:
1) நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வேண்டும்
2) நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெற கூடாது. சட்டசபைக்குள் அனைவர் முன்பாகவும், வெளிப்படையாக வாக்குப்பதிவு நடத்திதான், நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவை அறிவிக்க வேண்டும்.
3) இந்த விவகாரத்தில் ஒளிவு மறைவு இருக்க கூடாது என்பதால், தொலைக்காட்சிகளில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதை நேரலையில் காட்ட வேண்டும்.
4) இப்போதைய சபாநாயகரை தவிர்த்துவிட்டு, இடைக்கால சபாநாயகரை தேர்ந்தெடுத்து, அவர் மூலமாகத்தான் வாக்கெடுப்பு நடக்க வேண்டும்.
இவ்வாறு அதிரடி நிபந்தனைகளை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் முன்பாகவே, அனைத்து எம்எல்ஏக்களும் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
கர்நாடகாவில் எடியூரப்பா கடந்த வருடம் ஆட்சியமைத்தபோது, இதுபோல அதரடியாக உத்தரவை பிறப்பித்தது சுப்ரீம் கோர்ட். எனவே 24 மணி நேரத்திற்குள், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை இழந்தார் அவர். ஆனால் இப்போது பிற கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளார்.
சுப்ரீம் கோர்டின் இன்றைய உத்தரவும், கர்நாடக உத்தரவை நினைவுபடுத்தும் வகையில் இருப்பது கவனிக்கத்தக்கது. இதன் மூலம், இதுபோன்ற அரசியல் சூழ்நிலைகளில், சுப்ரீம் கோர்ட், ஒரே மாதிரி முடிவுகளைத்தான் எடுக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
குதிரை பேரத்தை தவிர்க்க உடனே, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் வாதம் சுப்ரீம் கோர்ட்டில் எடுபட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications