பாஜக ஆட்சி அமைக்காவிட்டால் தேசியவாத காங்-காங்.-க்கு ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும்: மிலிந்த் தியோரா
டெல்லி: மகாராஷ்டிராவில் பாஜக- சிவசேனா ஆட்சி அமைக்காவிட்டால் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுக்கு ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மிலிந்த் தியோரா கூறியுள்ளார்.
மகாராஷ்டிவில் 105 எம்.எல்.ஏக்களை கொண்ட பாஜகவை தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்திருக்கிறார். 56 எம்.எல்.ஏக்களைக் கொண்ட சிவசேனா, பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தருமா? என்கிற கேள்வி நீடிக்கிறது.

இன்னொருபக்கம் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி ஒன்றும் எதிரி அல்ல என சிவசேனாவின் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
அத்துடன் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சிப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Maharashtra’s Governor should invite NCP-Congress - the second largest alliance - to form the government now that BJP-Shivsena have refused to do so
— Milind Deora मिलिंद देवरा (@milinddeora) November 10, 2019
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மிலிந்த் தியோரா தமது ட்விட்டர் பக்கத்தில், மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாமல் போனால் 2-வது பெரிய கட்சிகள் என்ற அடிப்படையில் தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கட்சிகளை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications