வந்தாச்சு 150 ரூபாய் நினைவு நாணயம்.. நரேந்திர மோடி வெளியிட்டார்.. மகாத்மா காந்தி நினைவாக
டெல்லி: மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 150 ரூபாய் நினைவு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாள் முழுக்க வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றின் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, 150 ரூபாய் நினைவு நாணயத்தை, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், பிரதமருடன் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும் பங்கேற்றார். சபர்மதி ஆசிரமத்தில் உள்ள குறிப்பேட்டில், பிரதமர் நரேந்திர மோடி தனது மெசேஜை எழுதினார். அதில், "காந்தியின் 150வது தினத்தில் நான் மிகவும் திருப்தியாக உள்ளேன். தூய்மை இந்தியா என்ற காந்தியின் கனவு நனவாகி கொண்டு இருக்கிறது. திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை இந்தியா நிறுத்தி விட்டது என்பதை இந்த தருணத்தில் நான் சொல்வதற்கு அதிர்ஷ்டம் செய்து உள்ளேன்." இவ்வாறு அந்தக் குறிப்பேட்டில் எழுதி உள்ளார்.
Ahmedabad: Prime Minister Narendra Modi releases commemorative Rs 150 coins, on the occasion of Mahatma Gandhi's 150th birth anniversary. #GandhiAt150 pic.twitter.com/JAvNpeUcjX
— ANI (@ANI) 2 October 2019
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் சீக்கியர்களின் குருமார்களில் ஒருவரான குரு கோபிந்த் சிங்கின், 350வது பிறந்த தினத்தை முன்னிட்டு 350 ரூபாய் நினைவு நாணயத்தை மோடி வெளியிட்டார். இதேபோன்று கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவாக, 100 ரூபாய் நினைவு நாணயத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications