மம்தா பானர்ஜிக்கு ஷாக்! பாஜக வைத்த செக்! மேற்கு வங்கத்தில் மாற்றம்.. வெளியானது கருத்துக்கணிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இரண்டு கட்டங்களாக நடைபெற்று வந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல், இன்று நிறைவடைந்திருக்கிறது. இந்நிலையில், யார் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கப் போகிறார்கள் என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, மொத்தம் 294 தொகுதிகள் இருக்கின்றன. ஆட்சியை பிடிக்க 148 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். கடந்த முறை மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் சுமார் 223 தொகுதிகளில் வென்று சாதனை படைத்திருந்தது. இந்நிலையில், இந்த முறை எந்த கட்சிகள் எத்தனை இடங்களை பெறும் என POLL DAIRY கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கிறது

- திரிணாமுல் காங்கிரஸ் 99-127
- பாஜக 142-171
- காங்கிரஸ் 3-5
- சிபிஎம் 2-3
- மற்றவை 0-1
என கட்சிகள் தொகுதிகளை கைப்பற்றும் என, POLL DAIRY தனது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications