சைலண்ட்டா இருந்தாங்க.. இப்போ வேற லெவல்.. மோகன்லால் மகளுக்கு இவ்வளவு திறமையா?
புதுடெல்லி: நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மாயா கவிதைப் புத்தகம் ஒன்றை விரைவில் வெளியிடுகிறார்.
பொதுவாக திரை நட்சத்திரங்களின் வாரிசுகள், சினிமா துறையையே விரும்பி தேர்ந்தெடுப்பது வழக்கம். எளிதில் வாய்ப்பு கிடைத்துவிடும் என்பதற்காக மட்டும் அல்ல.
சிறு வயதில் இருந்து ரசிகர்கள் கொண்டாடும் தன் பெற்றோரைப் பார்த்து பார்த்து, கலை ஆர்வம் அவர்களையும் தொற்றிக் கொள்வதனால் தான்.
ஆனால், இங்கு ஒருவர் சற்று வித்தியாசப்படுகிறார். தந்தை ஒரு உச்ச நட்சத்திரமாக இருக்கும் போது, எழுத்து, சிந்தனை, ஓவியம் என்று ஒரு படைப்பாளியாக தன்னை முன்னிறுத்துகிறார்.

விரைவில் கவிதை புத்தகம்
அவர், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகள் விஸ்மாயா. கிரைன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட் (Grains of Stardust) என்ற தலைப்பில் இவர் எழுதியுள்ள கவிதைப் புத்தகம் விரைவில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த புத்தகத்தின் அட்டைப் படத்தை விஸ்மாயா வெளியிட்ட போது அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

எளிமையாக இருக்கும்
இந்நிலையில் அவர் பிடிஐக்கு அளித்துள்ள பேட்டியில், " 'கிரைன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட்' புத்தகம் திடீரென உருவானது தான். நீங்கள் அதை படிக்கும் பொழுது, மிக எளிமையாக உணருவீர்கள்.

சிறிய வயதில் எழுதியது
சப்வேயில் காத்திருக்கும் போதோ, எனக்கு பிடித்த பாடலைக் கேட்கும் போதோ ஏதாவது ஒரு பெயிண்டிங் அல்லது இயற்கை காட்சியை பார்க்கும் பொழுது என்னுள் தோன்றிய கவிதைகளை அப்படியே டைப் செய்திருக்கிறேன். அவற்றில் பல கவிதைகள் நான் சிறிய வயதில் எழுதியது.

முன்னுரை எழுதிய தந்தை
அதேபோல் நான் வரைந்த ஓவியங்கள் சிலவற்றை காட்சிப்படுத்தலாம் என்று என் சகோதரர் எனக்கு ஐடியா கொடுத்தார்" என்று தெரிவித்துள்ளார். மகளின் இந்த முதல் படைப்பிற்கு தந்தை மோகன்லால் முன்னுரை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. தவிர, மோகன்லால் மகன் பிரணவ் ஒரு நடிகர் என்பது கூடுதல் தகவல்.












Click it and Unblock the Notifications