Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

24 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறி.. நீட் முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும்: கார்கே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 24 லட்சம் மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய நீட் முறைகேடு குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு குறித்து தமிழக அரசு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், தேசிய அளவில் தற்போது நீட் தேர்வுக்கு எதிராக குரல்கள் எழுந்திருக்கின்றன. இதற்கு காரணம் சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள்தான். அதாவது, தேர்வு எழுதியவர்களில் 1500 பேருக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன.

Mallikarjun Kharge Congress NEET Exam

67 தேர்வர்கள், 720 என்ற முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதற்கு முன்னர் யாரும் இப்படி பெற்றதில்லை. ஒரே மையத்தில் இருந்து அதிகம் பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளதும் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

எனவே நீட் தேர்வுக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு பணம் பெற்றுக்கொண்டு நடத்தப்படுகிறது. இதில் பல முறைகேடுகள் நடக்கின்றன. சமீபத்திய தேர்வு முடிவுகள் தங்கள் மாநில மாணவர்களுக்கு அநீதியாக அமைந்துள்ளது என்று கூறி, நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மகாராஷ்ட்ரா அரசு வலியுறுத்தியுள்ளது.

விவகாரம் பெரியதாக வெடித்த நிலையில், மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி, நீட் முறைகேடு குறித்து விசாரிக்கப்படும் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. 6 தேர்வு மையங்களில் மட்டும் தான் பிரச்னை நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளதால் மறு தேர்வு நடத்த வேண்டியதில்லை. நீட் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள உயர்கல்வித் துறை செயலாளர், முறைகேடு புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும்.

30 நிமிடங்கள் தேர்வு நேரம் குறைவாக இருந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இதன் மூலம் மாணவர்கள் 718, 719 மதிப்பெண்களும், 6 பேர் முழு மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கருணை மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை" என்று கூறியிருந்தார்.

ஆனால் இவரது விளக்கத்தை மாணவர்கள் ஏற்கவில்லை. எனவே போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேபோல நீட் தேர்வு முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என காங்கிரஸின் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

இந்நிலையில், நீட் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

"நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் மட்டும் பிரச்சனை இல்லை. இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளன, ஆவணங்கள் கசிந்துள்ளன, ஊழல் நடந்துள்ளது. மோடி அரசின் நடவடிக்கையால் நீட் தேர்வில் பங்கேற்கும் 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தேர்வு மையம் மற்றும் பயிற்சி மையங்கள் புற்றீசல்கள் போல உருவாகி, 'பணம் செலுத்துங்கள், வினாதாள்களை பெறுங்கள்' என்ற விளையாட்டை விளையாடி வருகிறது.

மோடி அரசாங்கம் தனது நடவடிக்கைகளின் பொறுப்பை, தேசிய தேர்வு முகமையின் தோள்களில் சுமத்திவிட்டு தப்பித்துக்கொள்ள முடியாது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோருகிறது.

விசாரணைக்குப் பிறகு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் மற்றும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் மோசடி மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அரசு சீரழித்துள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+