"ஒரு டெட் பாடி இருக்கு.." வாடகை கார் டிரைவருக்கு.. ஷாக் கொடுத்த இளைஞர்கள்.. பகீர் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெண் ஒருவரைக் கொடூரமாகக் கொலை செய்து அவரது உடலை ஓலா காரில் கொண்டு செல்ல முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. சொத்துக்கு ஆசைப்பட்டு பெண்களைக் கொடூரமாகக் கொலை செய்யும் சம்பவங்களும் நடந்தே வருகிறது.

அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது கான்பூரில் நடந்துள்ளது. குடும்ப சொத்திற்கு ஆசைப்பட்டு பெண் ஒருவரை அவரது மைத்துனரே கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இருப்பினும், அவரை போலீசார் கடைசியில் பிடித்துவிட்டனர்.

 Man booked Ola cab to move sister-in-laws body

என்ன நடந்தது: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து இளம்பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். அதன் பின்னர் ஒலா காரை புக் செய்து அதன் மூலம் உடலை அப்புறப்படுத்த முயன்ற ஷாக் சம்பவம் நடந்துள்ளது. உடலைச் சாக்குப் பையில் சுற்றி அதை காரில் ஏற்றியுள்ளனர். இருப்பினும், அதில் ரத்த கறை இருந்ததால் கார் ஓட்டுநர் உடனடியாக இது குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்காக அந்த பெண்ணை இந்த கும்பல் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட அந்த பெண் குசும் குமாரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். கொலையாளிகள் இந்த பெண்ணின் உறவினர்கள் தானாம். மூதாதையரின் சொத்துகளை அடையத் திட்டம் போட்ட அந்த கும்பல், அதற்குத் தடையாக இருந்த இந்த பெண்ணை தீர்த்துக் கட்டியுள்ளனர்.

கசிந்த ரத்தம்: இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மைத்துனர் மற்றும் அவரது உறவினர் இருவரும் சேர்ந்து தான் கொலை செய்துள்ளனர். கடந்த ஜூலை 11ஆம் தேதி அவர்கள் இருவரும் நொய்டாவில் இருந்து கான்பூரில் உள்ள மஹராஜ்பூருக்கு ஓலா காரை புக் செய்துள்ளனர். இந்த காரில் வைத்து உடலை அப்புறப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அந்த பெண்ணின் உடலைச் சாக்கில் போட்டு எடுத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், அப்போது அந்த சாக்கு பையில் இருந்த ரத்தம் கசிந்ததை டிரைவர் கவனித்துள்ளார்.

இதனால் காரை எடுக்க மாட்டேன் என்று அந்த டிரைவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த அவர்கள், டிரைவர் ஆபாசமாகப் பேசத் தொடங்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பியோடிய டிரைவர், நெடுஞ்சாலையில் இருந்த போலீசாரிடம் இது குறித்துத் தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் விசாரணையை போலீசார் ஆரம்பித்துள்ளனர். அப்போது தான் இந்த ஷாக் சம்பவம் தெரிய வந்துள்ளது.

போலீஸ் விசாரணை: இதில் தொடர்புடைய அனைவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பரம்பரை சொத்திற்காக குசும் குமாரியை கொலை செய்ய அவரது மைத்துனர் திட்டமிட்டுள்ளார். எல்லாம் திட்டமிட்டபடியே நடந்துள்ளது. உறவினர் ஒருவருடன் இணைந்து குசும் சுந்தரியை கொலை செய்துள்ளார். ஏற்கனவே பிளான் போட்டபடி அவரது உடலையும் அப்புறப்படுத்தக் காரை புக் செய்துள்ளார்.

இருப்பினும், அந்த ஓலா கார் ஓட்டுநர் மனோஜ் ர்தத கறையைப் பார்த்து போலீசாரிடம் தகவல் தெரிவித்ததால் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சதூர்யமாக செயல்பட்டு குற்றவாளியைப் பிடித்துக் கொடுத்த அந்த ஓட்டுநரை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+