மணிப்பூரில் பாஜக முதல்வர் பதவியேற்ற மறுநாளே.. வெடித்த வன்முறை! கலவரத்தால் மீண்டும் பதற்றம்
டெல்லி: மணிப்பூரில் பாஜக தலைமையிலான அரசு நேற்று மீண்டும் பொறுப்பேற்றது. புதிய முதலமைச்சராக யுனம் கெம்சந்த் சிங் புதிய முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இப்படி இருக்கையில், அவர் பதவியேற்ற அடுத்த நாளே வன்முறை வெடித்திருக்கிறது.
இன்று குக்கி சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் சூராசந்த்பூர் மாவட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. 5 குக்கி சட்டமன்ற உறுப்பினர்கள், பாஜக தலைமையிலான அமைச்சரவையில் இணைந்தனர். இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குக்கி அமைப்புகள் விடுத்த முழு அடைப்பு போராட்டத்தால் வன்முறை வெடித்திருக்கிறது.

பாதுகாப்பு படையினருடன் மோதல்
துயிபுங் பகுதியில் போராட்டக்காரர்கள் கற்களை வீசுதல், டயர்களை எரித்தல் மற்றும் பொது சொத்துக்களைச் சேதப்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்து, அந்த பகுதியை சீல் செய்ய பாதுகாப்புப் படையினர் முயற்சித்தபோது போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
குக்கி அமைப்பு கடும் எதிர்ப்பு
புதியதாக அமைந்த அமைச்சரவையில் மெய்தி சமூகத்தை சேர்ந்த யுனம் கெம்சந்த் சிங் முதலமைச்சராகவும், குக்கி சமூகத்தை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.வான நெம்ச்சா கிப்கென் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றிருந்தனர். இதற்கு குக்கி-ஜோ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
துணை முதல்வரை கொன்றால் பரிசு
குக்கி சமூகத்தை சேர்ந்தவர்கள், பாஜக தலைமையிலான குறிப்பாக மெய்தி தலைமையிலான அமைச்சரவையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, குக்கி சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பல பகுதிகளில் மக்கள் வீதிகளில் இறங்கினர். ஆயுதம் தாங்கிய குக்கி 'கிராமத் தொண்டர்கள்' அமைப்பு, துணை முதலமைச்சரான கிப்கெனை கொன்றால் ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
முழு அடைப்புக்கு அழைப்பு
அதேபோல இம்பாலில் நடந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட இரண்டு எம்.எல்.ஏ.க்களை கொன்றால் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்தது. குக்கி அமைப்புகளின் கூட்டமைப்பான ஜாயின்ட் ஃபோரம் ஆஃப் செவன் (JF7) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஒப்பந்தத்தை மீறிய எம்எல்ஏ
அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள குக்கி அமைப்புகளின் உச்ச அமைப்பான குக்கி-ஜோ கவுன்சில் (KZC), 5 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 'சமூகப் புறக்கணிப்பு' அறிவிப்பை வெளியிட்டது. அரசுடன் இணைந்ததன் மூலம் இந்த எம்.எல்.ஏ.க்கள் ஜனவரி 13 அன்று கவுஹாத்தி, அசாமில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீறியுள்ளதாக கவுன்சில் கூறியுள்ளது. இந்தத் தீர்மானம் எம்.எல்.ஏ.க்கள், KZC மற்றும் செயல்பாடுகளை நிறுத்தும் ஒப்பந்தத்தில் உள்ள ஆயுதக் குழுக்களால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications