மணிப்பூரில் பாஜக முதல்வர் பதவியேற்ற மறுநாளே.. வெடித்த வன்முறை! கலவரத்தால் மீண்டும் பதற்றம்
டெல்லி: மணிப்பூரில் பாஜக தலைமையிலான அரசு நேற்று மீண்டும் பொறுப்பேற்றது. புதிய முதலமைச்சராக யுனம் கெம்சந்த் சிங் புதிய முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இப்படி இருக்கையில், அவர் பதவியேற்ற அடுத்த நாளே வன்முறை வெடித்திருக்கிறது.
இன்று குக்கி சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் சூராசந்த்பூர் மாவட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. 5 குக்கி சட்டமன்ற உறுப்பினர்கள், பாஜக தலைமையிலான அமைச்சரவையில் இணைந்தனர். இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குக்கி அமைப்புகள் விடுத்த முழு அடைப்பு போராட்டத்தால் வன்முறை வெடித்திருக்கிறது.

பாதுகாப்பு படையினருடன் மோதல்
துயிபுங் பகுதியில் போராட்டக்காரர்கள் கற்களை வீசுதல், டயர்களை எரித்தல் மற்றும் பொது சொத்துக்களைச் சேதப்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்து, அந்த பகுதியை சீல் செய்ய பாதுகாப்புப் படையினர் முயற்சித்தபோது போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
குக்கி அமைப்பு கடும் எதிர்ப்பு
புதியதாக அமைந்த அமைச்சரவையில் மெய்தி சமூகத்தை சேர்ந்த யுனம் கெம்சந்த் சிங் முதலமைச்சராகவும், குக்கி சமூகத்தை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.வான நெம்ச்சா கிப்கென் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றிருந்தனர். இதற்கு குக்கி-ஜோ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
துணை முதல்வரை கொன்றால் பரிசு
குக்கி சமூகத்தை சேர்ந்தவர்கள், பாஜக தலைமையிலான குறிப்பாக மெய்தி தலைமையிலான அமைச்சரவையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, குக்கி சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பல பகுதிகளில் மக்கள் வீதிகளில் இறங்கினர். ஆயுதம் தாங்கிய குக்கி 'கிராமத் தொண்டர்கள்' அமைப்பு, துணை முதலமைச்சரான கிப்கெனை கொன்றால் ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
முழு அடைப்புக்கு அழைப்பு
அதேபோல இம்பாலில் நடந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட இரண்டு எம்.எல்.ஏ.க்களை கொன்றால் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்தது. குக்கி அமைப்புகளின் கூட்டமைப்பான ஜாயின்ட் ஃபோரம் ஆஃப் செவன் (JF7) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஒப்பந்தத்தை மீறிய எம்எல்ஏ
அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள குக்கி அமைப்புகளின் உச்ச அமைப்பான குக்கி-ஜோ கவுன்சில் (KZC), 5 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 'சமூகப் புறக்கணிப்பு' அறிவிப்பை வெளியிட்டது. அரசுடன் இணைந்ததன் மூலம் இந்த எம்.எல்.ஏ.க்கள் ஜனவரி 13 அன்று கவுஹாத்தி, அசாமில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீறியுள்ளதாக கவுன்சில் கூறியுள்ளது. இந்தத் தீர்மானம் எம்.எல்.ஏ.க்கள், KZC மற்றும் செயல்பாடுகளை நிறுத்தும் ஒப்பந்தத்தில் உள்ள ஆயுதக் குழுக்களால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications