Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணிப்பூரில் பாஜக முதல்வர் பதவியேற்ற மறுநாளே.. வெடித்த வன்முறை! கலவரத்தால் மீண்டும் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மணிப்பூரில் பாஜக தலைமையிலான அரசு நேற்று மீண்டும் பொறுப்பேற்றது. புதிய முதலமைச்சராக யுனம் கெம்சந்த் சிங் புதிய முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இப்படி இருக்கையில், அவர் பதவியேற்ற அடுத்த நாளே வன்முறை வெடித்திருக்கிறது.

இன்று குக்கி சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் சூராசந்த்பூர் மாவட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. 5 குக்கி சட்டமன்ற உறுப்பினர்கள், பாஜக தலைமையிலான அமைச்சரவையில் இணைந்தனர். இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குக்கி அமைப்புகள் விடுத்த முழு அடைப்பு போராட்டத்தால் வன்முறை வெடித்திருக்கிறது.

Manipur Tensions Flare

பாதுகாப்பு படையினருடன் மோதல்

துயிபுங் பகுதியில் போராட்டக்காரர்கள் கற்களை வீசுதல், டயர்களை எரித்தல் மற்றும் பொது சொத்துக்களைச் சேதப்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்து, அந்த பகுதியை சீல் செய்ய பாதுகாப்புப் படையினர் முயற்சித்தபோது போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

குக்கி அமைப்பு கடும் எதிர்ப்பு

புதியதாக அமைந்த அமைச்சரவையில் மெய்தி சமூகத்தை சேர்ந்த யுனம் கெம்சந்த் சிங் முதலமைச்சராகவும், குக்கி சமூகத்தை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.வான நெம்ச்சா கிப்கென் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றிருந்தனர். இதற்கு குக்கி-ஜோ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

துணை முதல்வரை கொன்றால் பரிசு

குக்கி சமூகத்தை சேர்ந்தவர்கள், பாஜக தலைமையிலான குறிப்பாக மெய்தி தலைமையிலான அமைச்சரவையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, குக்கி சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பல பகுதிகளில் மக்கள் வீதிகளில் இறங்கினர். ஆயுதம் தாங்கிய குக்கி 'கிராமத் தொண்டர்கள்' அமைப்பு, துணை முதலமைச்சரான கிப்கெனை கொன்றால் ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

முழு அடைப்புக்கு அழைப்பு

அதேபோல இம்பாலில் நடந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட இரண்டு எம்.எல்.ஏ.க்களை கொன்றால் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்தது. குக்கி அமைப்புகளின் கூட்டமைப்பான ஜாயின்ட் ஃபோரம் ஆஃப் செவன் (JF7) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஒப்பந்தத்தை மீறிய எம்எல்ஏ

அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள குக்கி அமைப்புகளின் உச்ச அமைப்பான குக்கி-ஜோ கவுன்சில் (KZC), 5 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 'சமூகப் புறக்கணிப்பு' அறிவிப்பை வெளியிட்டது. அரசுடன் இணைந்ததன் மூலம் இந்த எம்.எல்.ஏ.க்கள் ஜனவரி 13 அன்று கவுஹாத்தி, அசாமில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீறியுள்ளதாக கவுன்சில் கூறியுள்ளது. இந்தத் தீர்மானம் எம்.எல்.ஏ.க்கள், KZC மற்றும் செயல்பாடுகளை நிறுத்தும் ஒப்பந்தத்தில் உள்ள ஆயுதக் குழுக்களால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+