ஜெயலலிதாவை மறக்கவே முடியாது.. சென்னை பொங்கல் விருந்து சுவாரசியத்தை ‛மன் கி பாத்'தில் பகிர்ந்த மோடி
டெல்லி: ‛‛நம் நாட்டில் உன்னதமான செயல்களை செய்தவர்கள் என்றும் மக்களின் இதயங்களில் வாழ்கிறார்கள். ஜெயலலிதா அத்தகைய மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவர். பிப்ரவரி 24ம் தேதி அவரது பிறந்தநாள். . அவரது தேசபக்தி உணர்வு மிக உயர்ந்ததாக இருந்தது. ஜெயலலிதாவை சந்தித்த நினைவு இன்றும் பசுமையாக உள்ளது. 2002 மற்றும் 2013ம் ஆண்டுகளில் குஜராத்தில் நடைபெற்ற எனது பதவியேற்பு விழாக்களில் அவர் கலந்து கொண்டார். தனிப்பட்ட முறையில் அவர் காட்டிய அன்பும், அக்கறைக்கும் மீண்டும் ஒருமுறை எனது பணிவான அஞ்சலியை செலுத்துகிறேன்'' என்ற பிரதமர் மோடி புகழ்ந்து பேசினார்.
பிரதமர் மோடி இன்று ‛மன் கி பாத்' நிகழ்ச்சி வழியாக நாட்டு மக்களிடம் உரையாடினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பிப்ரவரி 24ம் தேதி வர உள்ளது.

இந்நிலையில் தான் ஜெயலலிதாவை குறிப்பிட்டு பிரதமர் மோடி புகழ்ந்ததோடு, இருவருக்கும் இடையேயான சந்திப்பு குறித்து மனம் திறந்து பேசினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது: ‛‛நமது நாட்டில், சமூக நலனுக்காக உழைத்தவர்கள், பொதுமக்களை முன்னிறுத்தி உன்னதமான செயல்களை செய்தவர்கள் என்றும் மக்களின் இதயங்களில் வாழ்கிறார்கள். ஜெயலலிதா அத்தகைய மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவர்.
பிப்ரவரி 24ம் தேதி அவரது பிறந்தநாள்.
தமிழ்நாட்டிற்கு நான் செல்லும்போதெல்லாம் அவர் மீதான ஆழமான அன்பை இன்றும் உணர்கிறேன். ஜெயலலிதா என்ற பெயரைக் கேட்டதுமே தமிழ்நாட்டு மக்களின் முகங்களில் ஒளி பரவுகிறது. நமது நாட்டுடன் குறிப்பாக கலாச்சார பாரம்பரியத்துடன் அவருக்கு சிறப்பான தொடர்பு இருந்தது.
ஆட்சியில் பல பாராட்டத்தக்க நடவடிக்கைகளை அவர் செய்திருந்தார். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பேணுவதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். அவரது தேசபக்தி உணர்வு மிக உயர்ந்ததாக இருந்தது. ஜெயலலிதாவை சந்தித்த நினைவு இன்றும் பசுமையாக உள்ளது.
2002 மற்றும் 2013ம் ஆண்டுகளில் குஜராத்தில் நடைபெற்ற எனது பதவியேற்பு விழாக்களில் அவர் கலந்து கொண்டார்.
அவரது சிந்தனை மிகத் தெளிவாக இருந்தது, கருத்துக்கள் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டன. இது அவரது மிகப் பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று. பல சந்தர்ப்பங்களில், தனிப்பட்ட முறையில் அவர் காட்டிய அன்பும், அக்கறைக்கும் மீண்டும் ஒருமுறை எனது பணிவான அஞ்சலியை செலுத்துகிறேன். மக்களுக்கான அவரது சேவைகள் என்றும் நினைவுகூரப்படும். மக்களுக்கான அவரது சேவைகள் என்றும் நினைவுகூரப்படும்'' என்று புகழ்ந்து பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications