டெல்லியில் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமா? சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் ஓர் அலசல்!
டெல்லி: மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் டெல்லி செங்கோட்டை பகுதியில் இன்று இரவு பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது. இந்த குண்டுவெடிப்பில் 15 பேர் பாதிக்கப்பட்டனர். 8 பேர் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன்னர் உயிரிழந்தனர். 3 பேர் கடுமையாக படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் கவனம் பெற்றிருக்கின்றன. இன்று டெல்லியில் நடந்த தாக்குதல், ஏற்கனவே நடந்த தாக்குதல்களின் தொடர்ச்சியா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. ஆயுதம் ஏந்திய சுமார் 3 தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் அதிகம் இருந்த பகுதிக்கு வந்து, கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், தீவிரவாதிகளின் தளம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த பல தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் பலியாகினர்.
இதற்கு முன்னர் கடந்த 2024ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் ரியாசி பகுதியில், கட்ராவில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு பக்தர்கள் பேருந்தில் சென்றுக்கொண்டிருந்தபோது, பேருந்தை மறித்து தி ரெசிஸ்டன்ட் பிரன்ட் எனும் தீவிரவாத குழுவினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டை நடத்தியிருந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே 9 பக்தர்கள் பலியாகினர். 41 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். தாக்குதலை நடத்திய தி ரெசிஸ்டன்ட் பிரண்ட் அமைப்பானது லஷ்கர்-ஏ-தொய்பாவின் கிளை அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
அதே ஆண்டில் மார்ச் மாதம் 1ம் தேதி கர்நாடகாவின் ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும், 9 பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணையில் இறங்கிய என்ஐஏ, முஸ்ஸாவீர் ஹுசைன் ஷாஸிப், அப்துல் மதீன் அகமது டாஹா, மாஸ் முனீர் அகமது, முழமில் ஷரீஃப் என மூன்று பேர் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறியது. இதனையடுத்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்த என்ஐஏ, கிரிப்டோ கரன்சி மூலம் இவர்கள் சதி செயலுக்கு நிதி திரட்டினார்கள் என்று கூறியிருக்கிறது.
அதற்கு முன்னர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி கொச்சியின் களமசேரியில் கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 5 பேர் வரை உயிரிழந்தனர். 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications