குழந்தைகள் சித்ரவதை விவகாரம்.. நித்தி வெளிநாடு சென்றதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இல்லை- மத்திய அரசு
டெல்லி: குழந்தைகளை சித்ரவதை செய்த விவகாரம் தொடர்பாக நித்தியானந்தா வெளிநாடு சென்றதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதே வேளையில் அவரை நாடு கடத்த வேண்டும் என எந்தவித கோரிக்கையும் எங்களுக்கு வரவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
பெங்களூரில் ஆசிரமம் எடுத்து நடத்தி வரும் நித்தியானந்தா தான் தியானத்தில் இருந்த நிலையில் சூரியன் உதயமாகாமல் இருக்க வைத்ததாக கூறி பல்வேறு பரபரப்புகளை ஏற்படுத்தியவர். இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஆசிரமத்தை நடத்தி வருகிறார்.
இங்கு 4 குழந்தைகள் கடத்தி தங்க வைக்கப்பட்டு அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.

இருவர் கைது
இதைய.டுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆசிரமத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் அந்த 4 குழந்தைகளும் மீட்கப்பட்டனர். அப்போது நித்தியின் சீடர்கள் பிரன்பிரியா மற்றும் பிரியத்வா ஆகியோர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்கள் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்படுகிறது. மீட்கப்பட்ட 4 பேரில் இரு குழந்தைகள் புகார்தாரான பெங்களூர் ஜனார்த்தன சர்மாவின் குழந்தைகள் ஆவர்.

வெளிநாட்டுக்கு
இதையடுத்து இருவரும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த நிலையில் குழந்தைகள் கடத்தல் குறித்து நித்தியானந்தாவிடம் விசாரணை நடத்த காவல் துறையினர் அவரை தேடினர். ஆனால் அவர் வெளிநாட்டுக்குத் தப்பி சென்றுவிட்டதாக தகவல் கிடைத்தது.

வீடியோ
அவர் மேற்கு இந்திய தீவுகளில் உள்ள டிரிடாட் அல்லது டுபாகோவுக்கு தப்பியதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து அவர் இந்தியா திரும்பியவுடன் கைது செய்யப்படும் என போலீஸ் தெரிவித்தது. இதையடுத்து தான் குழந்தைகள் கடத்தவில்லை என நித்தி ஒரு வீடியோவை வெளியிட்டார்.

நித்தி மறுப்பு
அதில் பேசிய நித்தியானந்தா, எனது ஆசிரமத்தில் குருகுலத்தில் பயிலும் மாணவர்களுடன் பெற்றோர்கள் எப்போது வேண்டுமானாலும் சந்தித்து பேச அவர்களுக்கு அனுமதி உள்ளது. குருகுலமும் புகார்தாரர் கூறியது போல் மூடி இருக்காது, திறந்தே இருக்கும்.

வெளியுறவுத் துறை
தற்போது நான் இமயமலையில் தங்கியுள்ளேன் என கூறியிருந்தார். இதனிடையே வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நித்தியானந்தாவை மீட்க மத்திய அரசின் உதவியை குஜராத் போலீஸ் நாடியது. இந்த நிலையில் நித்தியானந்தா இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்றதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை என வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

தகவல் ஏதும் இல்லை
இதுகுறித்து வெளியுறவுத் துறை செயலாளர் ரவீஷ்குமார் கூறுகையில் நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி சென்றதாக காவல் துறை மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து எந்த வித தகவலும் வரவில்லை. அப்படியே வெளிநாட்டில் உள்ள ஒருவரை நாடு கடத்த வேண்டுமானால் அவர் இருக்கும் இடமும் அவரது தகவல்களும் எங்களுக்கு தேவை. ஆனால் இது வரை அது போன்ற தகவல்கள் ஏதும் எங்களுக்கு கிடைக்கவில்லை. என கூறியிருந்தார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications