மேகதாது: மேல் நடவடிக்கை எடுக்க காவிரி ஆணையத்தின் அனுமதி தேவை- தலைவர்
டெல்லி: மேகதாது விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க காவிரி ஆணையத்தின் அனுமதி தேவை என ஆணைய தலைவர் மசூத் உசேன் தெரிவித்துள்ளார்.
மேகதாது அருகே அணை கட்ட கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதை தமிழக அரசு கடுமையாக எதிர்த்துள்ளது. இந்த நிலையில் காவிரி ஆணையத்தின் கூட்டம் இன்று கூடியது.

இதில் மேகதாது விவகாரத்தை தமிழக அரசு எழுப்பியது. இதுகுறித்து ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் கூறுகையில் இன்று நடைபெற்ற கூட்டம் பயனுள்ளதாக அமைந்தது. சில விஷயங்களில் முடிவு எடுத்துள்ளோம்.
காவிரி விவகாரத்தில் அனைத்து உறுப்பினர்களும் விரிவாக விவாதித்தோம். இந்தாண்டு பருவமழை சிறப்பாக உள்ளது. காவிரி படுகை பகுதிகள் நல்ல மழையை பெற்றிருக்கின்றன . காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டம், ஜனவரியில் நடைபெறும் .
மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது; அவற்றை கவனத்தில் கொள்வோம். மேகதாது விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி தேவைப்படுகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications