Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உத்தரப்பிரதேசத்தில் பாலிவுட் நடிகை வீட்டில் துப்பாக்கிச்சூடு! என்கவுண்டரில் இருவர் பலி!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர். இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச போலீசார் இரண்டு பேரை என்கவுண்டர் செய்து பிடித்திருந்தனர். இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளனர்.

பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவர், காசியாபாத்தில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட ரோத்தக்கைச் சேர்ந்த ரவிந்திரா மற்றும் சோனிபட்டைச் சேர்ந்த அருண், சர்வதேசக் குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

Disha Patani Mumbai police

செப்டம்பர் 12 அன்று அதிகாலை 3:45 மணியளவில், பரேலியில் உள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் திஷா பதானியின் குடும்ப வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த நேரத்தில் திஷா பதானியின் தந்தை (ஓய்வுபெற்ற துணை கண்காணிப்பாளர்), அவரது தாயார் மற்றும் அவரது மூத்த சகோதரி ஆகியோர் வீட்டில் இருந்தனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தாக்குதல் நடந்த சில நிமிடங்களில், கனடாவைச் சேர்ந்த பிரபல ரவுடி கோல்டி பிரார், சமூக ஊடகப் பதிவு ஒன்றில் இதற்குப் பொறுப்பேற்றார். பதானி மற்றும் அவரது சகோதரி இரண்டு மதத் தலைவர்களைப் பற்றிப் பேசிய கருத்துக்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறியிருந்தார். அந்தப் பதிவில் அச்சுறுத்தல்களும், பல குற்றவாளிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.

இதனையடுத்து உத்தரப்பிரதேச சிறப்பு அதிரடிப் படையின் (STF) நொய்டா பிரிவு மற்றும் டெல்லி காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து காசியாபாத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தனர். இந்த சம்பவத்தின்போது குற்றவாளிகள், போலீசார் மீது தாக்குதல் நடத்தி தப்ப முயன்றனர் என்றும் இதனால் குற்றவாளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் போலீசார் கூறியிருக்கின்றனர்.

இதில் ரவிந்திரா மற்றும் அருண் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இந்தச் சம்பவத்தின்போது ஒரு டெல்லி போலீஸார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். என்கவுன்டர் நடந்த இடத்தில் ஒரு க்ளாக் பிஸ்டல், ஒரு சிகானா பிஸ்டல் மற்றும் பல தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று காவல்துறை கூறியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+