பிரதமர் மோடி பிறப்பால் ஒரு இந்தியர்.. குடியுரிமை சான்றிதழை காட்ட தேவையில்லை.. ஆர்டிஐ தகவல்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பிறப்பால் ஒரு இந்தியர்.. எனவே அவர் குடியுரிமைச் சான்றிதழ் எதையும் காட்டத் தேவையில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் என்பது யாருக்கு பொருந்தும், யாருக்கு பொருந்தாது என்பது குறித்து மிகப்பெரிய குழப்பம் உருவாகி உள்ளது. அதாவது பிறப்பு சான்றிதழை அடிப்படையாக வைத்து அரசு என்ஆர்சி கொண்டுவரப்போவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
அஸ்ஸாமில் கொண்டுவரப்பட்ட என்ஆர்சியில் பிறப்பு சான்றிழே முக்கிய ஆவணமாக பார்க்கப்பட்டது. அத்துடன் தற்போது ஒருவர் பிறந்திருந்தாலும் அவரது தந்தை அல்லது அவரது முன்னோர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

என்ஆர்சி குறித்து
இதேபோல் நாடு முழுவதும் என்ஆர்சி என்ற ஒன்று கொண்டுவரப்படும் என்றும், அதற்காகவே குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்ட சமூக மக்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படும் என்கிற அச்சமும் நிலவுகிறது. ஆனால் இதனை மத்திய அரசு ஆரம்பம் முதலே திட்டவட்டமாக மறுத்துவருகிறது. அஸ்ஸாம் வேறு மற்ற இந்தியாவின் பிற பகுதிகள் என்பது வேறு என்று கூறி வருகிறது.

பாதிப்பு வராது
இந்தியா முழுவதும் என்ஆர்சி கொண்டுவரும் திட்டம் அரசுக்கு இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு இறுதியில் தெரிவித்தார். அத்துடன் குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு வராது என்றும் குடியுரிமை திருத்த சட்டம் என்பது அண்டை நாடுகளில் இருந்து அகதியாக வந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் சட்டம் என்றும், யாருடையை குடியுரிமையையும் பறிக்கும் சட்டம் இல்லை என்றும் பிரதமர் மோடியே கூறினார்.

டெல்லி வன்முறை
இதற்கிடையே குடியுரிமை சட்டம் மற்றும் என்ஆர்சி குறித்த பெரிய அளவில் இந்தியா முழுவதுமே உள்ளது. அஸ்ஸாம் பாணியில் நடக்குமோ என்ற அச்சமே இதற்கு காரணம். இதனால் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது- குறிப்பாக டெல்லியில் நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. 42 பேர் வரை கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

குடியுரிமை சான்றிதழ்
இந்நிலையில் ஸ்ரீசுபாங்கர் சர்கர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் குடியுரிமைச் சான்றிதழை காண்பிக்குமாறு கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த பிரதமர் அலுவலகம் இந்தியக்கு குடியுரிமை சட்டம் 1955 இன் பிரிவு 3ன் படி பிறப்பால் பிரதமர் நரேந்திர மோடி இந்திய குடிமகன் என்றும், அவர் பிறப்பால் இந்தியர் என்ற அந்தஸ்தை பெறுவதால் அவருக்கு குடியுரிமை சான்றிழ் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications