43 ஆண்டுகள் நாங்கள் நண்பர்கள்.. ஆனால் மோடி டீ விற்றதை நான் பார்த்ததில்லை- பிரவீன் தொகடியா
டெல்லி: எங்களது 43 ஆண்டுகால நட்பின்போது பிரதமர் நரேந்திர மோடி டீ விற்று நான் பார்த்ததே இல்லை என விஷ்வ இந்து பரிஷத்தின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகடியா தெரிவித்துள்ளார்.
அந்தர் ராஷ்ட்ரீய இந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகடியா. இவர் கூறுகையில் மோடியின் அறிக்கைக்கு பிறகு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ராமர் கோயில் கட்டப்படாது என ஆர் எஸ் எஸ் தலைவர் பய்யாஜி ஜோஷி கூட தெளிவாக கூறிவிட்டார்.

முத்தலாக்
பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் 125 கோடி இந்தியர்களை இருட்டில் வைத்திருந்தது. ஆனால் தற்போது நாட்டின் இந்துக்கள் விழித்து கொண்டனர். முத்தலாக்கை கொண்டு வந்ததன் மூலம் எரியும் கொள்ளியில் எண்ணெய்யை மோடி ஊற்றிவிட்டார்.

காணாமல் போய்விடும்
மோடியை இரண்டாவது முறையாக பிரதமராக தேர்வு செய்தாலும் அவர் ராமர் கோயிலை கட்ட எந்த வித முயற்சியையும் அளிக்க மாட்டார். ராமர் கோயில் கட்டி முடித்துவிட்டால் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகிய இரு கட்சிகளுக்கு வேலை இல்லாததால் அவை காணாமல் போய்விடும்.

43 ஆண்டுகள்
எனவேதான் ராமர் கோயில் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வராமல் பதற்றமான சூழலிலேயே வைத்துள்ளனர். மோடியுடன் நான் 43 ஆண்டுகள் நட்புடன் இருந்தேன்.

பார்த்ததில்லை
இதில் ஒரு முறைகூட அவர் டீ விற்று நான் பார்த்ததே இல்லை. எல்லாம் மக்களின் அனுதாபத்தை பெறவே மோடி டீ விற்றதாக கூறியுள்ளார். மோடி தேர்தலில் தோல்வியடைந்தவுடன் அவர் குஜராத்துக்கும் பய்யாஜி ஜோஷி நாக்பூருக்கும் செல்ல வேண்டியதுதான் என்று தொகடியா தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications