காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் மோடி அஞ்சலி.. டெல்லி போர்நினைவுச்சின்னத்திலும் மரியாதை!
Recommended Video
டெல்லி: பிரதமராக இன்று மீண்டும் பதவியேற்கவுள்ளதை முன்னிட்டு மகாத்மா காந்தி, வாஜ்பாய் ஆகியோரின் நினைவிடங்களில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
நரேந்திர மோடி இன்று இரவு 7 மணிக்கு மீண்டும் 2வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கவுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதற்கான விழா ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மகாத் காந்தியின் நினைவிடத்தில் மோடி அஞ்சலி செலுத்தினார். ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்திலும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். வாஜ்பாய் நினைவிடத்தில் அவரது வளர்ப்பு மகளும் அஞ்சலி செலுத்தினார். அவரிடம் மோடி நலம் விசாரித்தார்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினர். காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களை தொடர்ந்து போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
போர் நினைவுச்சின்னத்தில் அஞ்சலி செலுத்த சென்ற பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவேற்று அழைத்து சென்றார். மோடி பதவியேற்பை முன்னிட்டு டெல்லியில் மத்திய பாதுகாப்பு படையினர், அதிவிரைவுப் படையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications