உச்சக்கட்டத்தை எட்டும் மேற்காசிய போர்.. மோடி எடுத்த முக்கிய ஸ்டெப்! அமைதி எப்போது?
டெல்லி: மேற்காசியாவில் போர் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில் போர் குறித்து பிரான்ஸ் அதிபருடன், நரேந்திர மோடி பேசியிருக்கிறார்.
இந்த தொலைபேசி உரையாடலில், மோதலில் ஈடுபடும் நாடுகள், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவது குறித்து பேசினோம் என்றும், அமைதியை கொண்டுவர தொடர்ந்து நாங்கள் இணைந்து செயல்படுவோம் எனவும் மோடி கூறியதாக தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தனது x பக்கத்தில், "இன்று எனது நண்பர் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பேசினேன். மேற்கு ஆசியாவில் மாறிவரும் சூழல் குறித்த எங்களது பொதுவான கவலைகள் குறித்தும், மீண்டும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிமுறைக்குத் திரும்ப வேண்டியதன் அவசியம் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். இப்பகுதியில் அமைதியை விரைவாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் நாங்கள் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயல்படுவோம்" என்று பதிவிட்டிருக்கிறார்.
முன்னதாக 48 மணி நேரத்தில், 8 மேற்காசிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக், குவைத் இளவரசா் ஷேக் சபா அல்-காலித் அல்-ஹமத் மற்றும் கத்தாா் அமீா் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானி என வளைகுடா தலைவர்களுடன் போர் பதற்றத்தை தணிப்பது குறித்தும், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் மோடி பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications