Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நபிகள் நாயகம் அவதூறு: மோடியின் அமைதி தற்செயலானது அல்ல- முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி சந்தேகம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நபிகள் நாயகம் குறித்த பாஜக செய்தித் தொடர்பாளரின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அமைதி காத்துவருவது தற்செயலான விசயம் அல்ல என்று இந்திய குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்து இருக்கிறார்.

சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்திட்டார்.

 வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மும்பையில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மும்பை போலீஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதேபோல் டெல்லி போலீசும் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.

உபி கலவரம்

உபி கலவரம்

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசரில் இடிக்கப்படும் என காவல்துறை எச்சரித்து உள்ளது.

 இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு

இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு

இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சவூதி அரேபியா, ஈரான் அமீரகம், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகள், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஆகிய இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    Nupur Sharma-க்கு Dutch MP ஆதரவு | Pak-ல் இந்து கோவில்கள் மீது தாக்குதல் | Ajit Doval விளக்கம்
    ஹமீது அன்சாரி கருத்து

    ஹமீது அன்சாரி கருத்து

    இதுகுறித்து இந்திய முன்னாள் குடியரசு துணைத் தலைவர் முஹம்மது ஹமீது அன்சாரி கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில், "பாஜக செய்தித் தொடர்பாளரின் கருத்தை உலகில் உள்ள எந்த முஸ்லிமாலும் பொறுத்துக்கொள்ள முடியாது. இது முஹம்மது நபியின் ஆளுமை மீதான தாக்குதல். பல நாடுகளுடன் தொடர்புகளை வைத்து இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாகாரத்தில் அமைதி காத்து வருவது தற்செயலான விசயமல்ல. ஒன்று பிரதமர் இதற்கு உடன்படவில்லை அல்லது அதை குறைந்தபட்சம் ஒப்புக்கொள்கிறார் என எடுத்துக் கொள்ளலாம். வெளியுறவுத் துறை அமைச்சரும் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை." என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+