கேரளாவில் நாளை தொடங்கும் தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு மழைபொழிவு எப்படி இருக்கும்
டெல்லி: இந்த ஆண்டிற்கான தென் மேற்கு பருவமழை நாளை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கேரளாவில் கரையோர பகுதிகளில் மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக வாட்டி வதைத்த வெயிலின் தாக்கம் தற்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் தணிந்துள்ளது, மக்களுக்குச் சற்றே ஆறுதல் அளித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். இந்த இரண்டு காலங்களிலும்தான் நாட்டிற்குத் தேவையான மழை பெருமளவு பெய்யும்.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை நாளை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளாவின் தெற்கு முனையில் பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களில் கிட்டத்தட்ட பாதிக்கு முறையான நீர்ப்பாசனம் இல்லை. அரிசி, சோளம், கரும்பு, பருத்தி, சோயா போன்ற பயிர்களை வளர்க்க விவாசியகள் பெரும்பாலும் தென்மேற்கு பருவ மழையையே நம்பியுள்ளனர்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையில் இந்தியாவுக்குச் சராசரியாக மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications