பிஎஃப் பணம்.. சென்னைக்கு 29ம் தேதி போகிறவர்கள் கையில் இருக்க வேண்டிய ஆவணங்கள் என்னென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிஎஃப் பணம் தொடர்பான சிக்கல்களை தீர்க்க வேண்டும் என்றால் அலுவலகத்திற்குச் சென்று அலைவது பலருக்கும் சிரமமானது. பலரும் பிஎஃப் பணம் எடுப்பது தொடர்பாகவும், ஓய்வூதியத்தில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பாகவும் அலுவலகத்திற்கு அலைகிறார்கள். அப்படி அலைபவர்களின் சிரமத்தைக் குறைத்து, அவர்களின் பிரச்சனைகளுக்கு உள்ளூரிலேயே தீர்வு காண வேண்டும் என்று மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை விரும்புகிறது அதற்காக மாதம் ஒரு முறை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னை வடக்கு மண்டலம் சார்பில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம் 29-ந்தேதி நடைபெறும் என கமிஷனர் நிஷா ஓவி அறிவித்துள்ளார்.

மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் பிஎஃப் பணம் பிடிக்கின்றன. அப்படி பிடிக்கப்படும் பிஎஃப் பணம் தொடரர்பாக நீங்கள் ஆன்லைனில் புகார் அளித்தும் தீராத சிக்கல்களுக்கு, அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்றால், அதற்கான முகாம் மாதம் ஒரு முறை எல்லா பெரிய ஊர்களிலும் நடத்தப்படுகிறது.

PF camp June 29 salaried employees need to know about UAN Aadhaar cards and PAN cards

பொதவாக மண்டல பிஎஃப் அலுவலகங்களில் தான் நீங்கள் உங்கள் பிரச்சனையை முறையிட்டு வந்திருப்பீர்கள். கிராமப்புற மற்றும் பிற நகர தொழிலாளர்கள் மதுரைக்கோ, சென்னைக்கோ, வேலூருக்கோ, கோவைக்கோ, அலையாமல், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட முக்கிய இடங்களில் மாதம் ஒரு முறை முகாம் நடத்தப்படுகிறது.

வெறும் பிரச்சனைக்காக மட்டுமின்றி, PF கணக்கில் உள்ள புதிய டிஜிட்டல் வசதிகள், இ-நாமினேஷன் , மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அந்த முகாமில் ஆலோசனைகள் வழங்கப்படும். அப்படியான முகாம் சென்னையில் நடைபெற இருக்கிறது. முதியவர்கள் தங்களது வாழ்வளிப்புச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளை இந்த முகாமிலேயே பயோமெட்ரிக் முறையில் சரிசெய்து கொள்ள முடியும். ஓய்வு பெற்ற பிறகும் மாத ஓய்வூதியம் வராமல் கணக்கில் உள்ள சிக்கல்களை உடனே தீர்க்கலாம். பழைய நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்திற்கு PF கணக்கை மாற்றும்போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காணலாம். UAN எண் தெரியாமல் இருப்பது, மொபைல் எண் இணைப்பு விடுபட்டது, வங்கி கணக்கு எண் (KYC) அப்ரூவல் ஆகாமல் இருப்பது போன்றவற்றைச் சரிசெய்ய முடியும்.

ஆதார் கார்டில் உள்ளபடியும், பிஎஃப் கணக்கில் உள்ளபடியும் பெயர், தந்தை பெயர், அல்லது பிறந்த தேதி மாறாக இருந்தால், அதைச் சரிசெய்வதற்கான கூட்டுப் பிரகடனப் படிவத்தை இங்கே சமர்ப்பித்து விரைவாக மாற்றிவிட முடியும். பிஎஃப் அட்வான்ஸ் பணம் அல்லது முழு பிஎஃப் தொகையையும் எடுக்கும்போது, ஆன்லைனில் கிளைம் ரிஜெக்ட் ஆகியிருந்தால், அதற்கான சரியான காரணத்தைக் கேட்டு அறியலாம்.

சென்னை வடக்கு மண்டல வைப்பு நிதி கமிஷனர்-1 நிஷா ஓவி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், வைப்பு நிதி உங்கள் அருகாமையில் என்ற தலைப்பிலான குறைதீர்க்கும் முகாம் சென்னை பாரிமுனையில் உள்ள செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 29-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெற உள்ளது.

முகாமில், வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், முதலாளிகளிடம் இருந்து பெறப்படும் குறைகளை நிவர்த்தி செய்தல், தொழிலாளர்களுக்கு ஆன்லைன் சேவைகள் பற்றி விளக்குதல், சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfT15o8x9p82Cys7QSe-kntX6CD-eCOE2O-jHf97ltk-llonA/viewform?usp=sharing-amp;ouid=106859029795621361670 என்ற இணைப்பில் தங்கள் விவரங்களை பதிவு செய்யவேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+