Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முக்குலத்தோரை ‛தேவர்’ என அழைக்ககோரி வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசை கைகாட்டிய தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கள்ளர், மறவர், அகமுடையார் இணைந்த முக்குலத்தோரை, தேவர் சமுதாயம் என அழைக்கும் அரசாணையை அமல்படுத்த வேண்டும் என்று ஆணையிட கோரிய வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பரபரப்பான பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழக அரசு, மத்திய அரசை கை காட்டி உள்ளது.

தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையார் ஆகியோரை இணைத்து முக்குலத்தோர் என அழைக்கப்படுகின்றனர். இந்நிலையில் தான் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

supreme court Devar

அதில் தேவர் சமுதாயம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் கடந்த 1995ம் ஆண்டு வெளியிட்ட அரசாணையை செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

மேலும் அந்த மனுவில், ‛‛தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையோர் இணைந்த சமுதாயத்தை தேவர் என்ற பெயரில் அழைப்பது தொடர்பாக கடந்த 11.9.1995ல் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் இந்த அரசாணை என்பது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் ஒவ்வொருவரும் வெவ்வேறு பிரிவுகளில் உள்ளனர்.

அதாவது கள்ளர், அகமுடையோர் மற்றும் சேர்வை பிரிவினர் பிற்படுத்தப்பட்ட பிரிவிலும், பிரமலைக் கள்ளர், மறவர் பிரிவினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிலும் இருக்கின்றனர். அதாவது ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பல பிரிவுகளாக இருக்கின்றனர். எனவே தமிழ்நாடு அரசின் அரசாணையை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்'' என தெரிவித்து இருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க 4 வாரங்கள் காலஅவகாசம் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் தான் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கள்ளர், மறவர், அகமுடையார் இணைந்த முக்குலத்தோரை, தேவர் என அழைக்க ஆணையிடுவதில் மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். இதற்கான அதிகாரம் என்பது மத்திய அரசுக்கு தான் உள்ளது. மத்திய அரசு இன்னும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை. சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசு தான் தாமதம் செய்கிறது. இந்த விவகாரத்துக்கு மத்திய அரசு மட்டுமே முழு பொறுப்பு. ஏனென்றால் இந்த விஷயத்தில் தமிழக அரசு தனியாக ஒரு முடிவு எடுக்கவோ, அறிவிப்பு வெளியிடவோ மேற்கொள்ள முடியாது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+