10 சிம் கார்டுகளை வைத்திருந்தால் 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்படும்! மத்திய அரசின் புதிய ரூல்ஸ்
டெல்லி: ஒரு தனிநபர் 10 சிம்கார்டுகளை வைத்திருந்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. மேலும் 10 சிம் வைத்திருப்பது குறித்து முதல் முறையாக கண்டறியப்பட்டால் ரூ 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செல்போனில் போடப்படும் சிம் கார்டுகளை வைத்து பல்வேறு குற்றச் சம்பவங்களுக்கு விடை கிடைக்கிறது. அதே நேரத்தில் அந்த சிம் கார்டுகள் மூலம் பல குற்றச் சம்பவங்களும் நடக்கின்றன. குற்றச் சம்பவங்களை நிகழ்த்துவோர் பல சிம் கார்டுகளை வைத்து எளிதாக தப்ப பார்க்கிறார்கள்.

அது போல் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களுக்கும் சிம் கார்டுகளை மாற்றி மாற்றி பயன்படுத்தி தப்புகிறார்கள். சில அரசியல்வாதிகள், பிரபலங்கள் உள்ளிட்டோர் குற்றம் செய்துவிட்டு ஓடி ஓளியும் போது அவரது குடும்பத்தினரை வெவ்வேறு எண்களில் இருந்து அழைத்து பேசுவதால் அவர்கள் போலீஸில் சிக்காமல் தப்பிவிடும் நிலை உள்ளது.
எப்படியும் நம்ம தமிழ்நாடு போலீஸ் குற்றவாளிகளை கண்டுபிடித்துவிடுவார்கள்- அது வேறு விஷயம். இது போல் சமூகவிரோத செயல்களுக்கு சிம் கார்டுகள் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால் அதை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
மேலும் தொலை தொடர்பு நிறுவனங்களும் சிம் கார்டை இலவசமாக கொடுக்கிறது. பல்வேறு ஆஃபர்களையும் அள்ளி கொடுப்பதால் பலர் சும்மாதானே வருது, வாங்கி போடுவோம் என செல்போன் சிம்களை வாங்கி குவிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த சிம்களின் எண்கள் கூட அவர்களுக்கு தெரிவதில்லை. அவை தப்பி தவறி சமூகவிரோதிகளுக்கு கிடைத்துவிடுகிறது.
இந்த சிம்களைப் பயன்படுத்தி குற்றச் செயல்களை செய்யும் சமூகவிரோதிகள் சிம்கார்டை தூக்கி எறிந்து விடுகிறர்கள். இந்த நிலையில்தான் குற்றங்களை தடுக்கும் விதமாக மத்திய அரசு புது சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் கொண்டு வந்துள்ள புதிய நெறிமுறைகளில் ஒருவர் அதிகபட்சமாக 9 சிம்கார்டுகளை மட்டுமே தனது பெயரில் வைத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் தனது பெயரில் 10 சிம்கார்டுகளோ அல்லது அதற்கு மேற்பட்டோ வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ 50 ஆயிரம் முதல் ரூ 2 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். அது போல் அஸ்ஸாம், ஜம்மு காஷ்மீர் போன்ற பதற்றமான மாநிலங்களில் ஒருவர் அதிகபட்சமாக 6 சிம்கார்டுகள் மட்டுமே தங்களது பெயர்களில் வைத்திருக்க முடியும் என புதிய சட்டம் சொல்கிறது.
ஒருவர் அதிகமான சிம் கார்டுகள் வைத்திருந்து முதல் முறை பிடிபட்டால் ரூ 50 ஆயிரம் அபராதம் என அறிவிக்கப்பட்டது. அது குறித்து குற்றம் தொடருமானால் அதிகபட்சமாக ரூ 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஒருவரின் ஆவணங்களைப் பயன்படுத்தி சிம் கார்டுகள் உபயோகப்படுத்தியது தெரியவந்தால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ 50 லட்சம் வரை அபராதம் விதிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
சட்டவிரோதமாக வயர்லெஸ் கருவி வைத்திருந்தாலும் மேற்கண்ட அபராதம் விதிக்கப்படும். அது போல் வணிக செய்திகளை பயனாளிகளின் அனுமதியின்றி அனுப்பினால் அந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு ரூ 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். சேவைகளை வழங்க தடையும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எதிர்பார்க்காத இடத்தில்.. சென்னையில் வரப்போகும் பிரம்மாண்ட பேருந்து நிலையம்.. நிறைவு அடைந்த பணிகள்? -
மருத்துவமனைக்கு கொண்டு வரும் போதே.. ரோபோ சங்கர் உடலில் இருந்த பெரிய பிரச்சனை.. என்ன நடந்தது? -
சவுதி- பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம்.. மவுனம் கலைத்த இந்தியா.. ஒரே நாளில் மாறும் உலக அரசியல்? -
ஓய்வூதியம் பெறுவோருக்கு ஹேப்பி.. மாதம் ரூ.22000.. தமிழக அரசு சொன்னதுமே விடுதலை போராட்ட வீரர்கள் குஷி -
ஆண்மை இருந்தால் "அவர்களை” கேள்வி கேளுங்க! Kpy பாலா மீதான விமர்சனங்களுக்கு மதுரை முத்து பதிலடி! -
KPY Bala: கேபிஒய் பாலாவுக்கு பணம் தர்றது யார்? ஆம்புலன்ஸ், பவுன்சர் பரபர.. தன்னிலை விளக்கம் தருவாரா -
டிகே சிவக்குமார் போட்ட போடு.. பெங்களூரை விட்டு போகமாட்டோம் என அறிவித்த நிறுவனம்.. பின்னணி -
அமுதவாணன் கிட்ட கால் கிரவுண்டு வாங்கி.. நான் ஒரு தினக்கூலிங்க.. நம்பர் பிளேட்டுடன் வந்த கேபிஒய் பாலா -
"நல்ல லக் தான்.. தங்கம் விலை ரூ.9500 வரை போகலாம்.." ஆனா நொடியே புதிய குண்டை வீசிய ஆனந்த் சீனிவாசன் -
100 சவரன் தங்கம்! கணவரிடம் நெருங்க முடியாமல் தவித்த வக்கீல் மனைவி! அரசு ஆபீசரை தூக்கிய சென்னை போலீஸ் -
ரோபோ சங்கர் இறுதி சடங்கு LIVE: மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடல் தகனம் -
Robo Shankar wife: ரோபா சங்கரின் மனைவி பிரியங்காவும் நடிகைதான் தெரியுமா? கணவருக்கு முன்பே சினிமாவில் எண்ட்ரி












Click it and Unblock the Notifications