இந்தியாவில் கொரோனா கேஸ்கள் படுவேகமாக அதிகரிப்பு- மும்பையில் 3,671 பேருக்கு பாதிப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000-த்தை தாண்டியதாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று மட்டும் 3671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக நாடுகள் பலவற்றில் கொரோனா கோரத்தாண்டவமாடுகிறது. டெல்டா வகை, ஓமிக்ரான் வகை எனும் உருமாறிய கொரோனா வைரஸ்கள் சுனாமிப் பேரலை போல உலக நாடுகளை வாட்டி வதைக்கிறது.

இந்தியாவில் அதிகரித்த பாதிப்பு

இந்தியாவில் அதிகரித்த பாதிப்பு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,000-த்தை நெருங்கி உள்ளது. இந்தியாவில் கடந்த வாரம் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,000 என இருந்தது. தற்போது ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000த்தை தாண்டியதாக உள்ளது.

மும்பையில் பாதிப்பு அதிகம்

மும்பையில் பாதிப்பு அதிகம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று 3,671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து 371 பேர் குணமடைந்தனர். மும்பையில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 11,360. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி பகுதியில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கடந்த மே மாதத்தில் இருந்து தாராவியில் பதிவான அதிகபட்ச கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இது.

மே.வங்க நிலவரம்

மே.வங்க நிலவரம்

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 2,128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 1,067 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 12 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தில் தற்போது கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 8,776.

கேரளாவில் 64 பேருக்கு ஓமிக்ரான்

கேரளாவில் 64 பேருக்கு ஓமிக்ரான்

கேரளாவில் இன்று 2,423 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அதேநேரத்தில் கொரோனாவில் இருந்து 2879 பேர் இன்று மீண்டனர். கேரளாவில் இன்று கொரோனாவால் 15 பேர் உயிரிழந்தனர். கேரள மாநிலத்தில் கொரோனாவுக்கு 19,835 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 64. இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளும் இரவு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒடிஷாவில் மேலும் 5 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒடிஷாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+