மும்பையில் 175 பேரை பலி கொண்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் ”மகனை” தூக்கிட்டாங்களாம்- செம்ம ஸ்கெட்ச்!
டெல்லி: இந்தியாவின் வர்த்தக் தலைநகரான மும்பையில் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து தாக்குதல் நடத்தி 175 பேரை பலி கொண்ட சர்வதேச தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மகனை செப்டம்பர் 26-ந் தேதி முதல் காணவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் பல்வேறு நாசகார செயல்களின் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத். ஜமாத் உல் தாவா என்ற பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனர். இது இ தொய்பா என்ற இன்னொரு பயங்கரவாத இயக்கத்தின் முன்னணி அமைப்பு.

ஜம்மு காஷ்மீரை மையப்படுத்திய இந்தியாவின் பெரும்பாலான தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கும் ஒட்டுமொத்த மூளையாக செயல்பட்டு வருவது ஹபீஸ் சயீத் மட்டும்தான்.
2008-ம் ஆண்டு இந்தியாவின் மும்பை மாநகரில் அஜ்மல் கசாப் உள்ளிட்ட 10 பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து நாட்டையே நிலைகுலையச் செய்த சம்பவத்தின் மூளையும் ஹபீஸ் சயீத்தான். மும்பை தாக்குதலில் மொத்தல் 175 பேரின் உயிரை குடித்த பயங்கரவாதி ஹபீஸ் சயீத், இந்தியா உள்ளிட்ட நாடுகளால் தேடப்படுகிற குற்றவாளி. சர்வதேச நாடுகளால் பிரகடனப்படுத்தப்பட்ட பயங்கரவாதி. ஆனால் பாகிஸ்தானில் படுசுதந்திரமாக வலம் வருகிறவர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் இருந்து ஹபீஸ் சயீத் மகன் கமாலுதீன் சயீத் நேற்று முதல் காணாமல் போயிருக்கிறார். தற்போது கமாலுதீன் சயீத் எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல் ஹபீஸ் சயீத் தலைமையிலான பயங்கரவாத கும்பல் விழிபிதுங்கி கிடக்கிறது.

மேலும் கமாலுதீன் சயீத்தை தேடும் பணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இறக்கிவிடப்பட்டது. ஆனாலும் ஐ.எஸ்.ஐ. அமைப்பால் கமாலுதீன் சயீத் கதி என்ன என்பது தெரியவில்லையாம். கமாலுதீன் சயீத், ஸ்கெட்ச் போடப்பட்டு மர்ம நபர்களால் தூக்கப்பட்டிருக்கலாம் என்கின்றன சர்வதேச ஊடகங்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் ஹபீஸ் சயீத் வீடு மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி இருந்தனர். ஆனால் அந்த தாக்குதல் முயற்சி வெற்றி பெறவில்லை. அத்தாக்குதல் நடத்த வந்த 3 பேர் பலியாகினர். இதனால் அத்தாக்குதலுக்கு பதிலடியாக அந்த மர்ம நபர்கள் கமாலுதீன் சயீத்தை தூக்கி இருக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் எழுப்பி உள்ளன.
-
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications