மும்பையில் 175 பேரை பலி கொண்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் ”மகனை” தூக்கிட்டாங்களாம்- செம்ம ஸ்கெட்ச்!
டெல்லி: இந்தியாவின் வர்த்தக் தலைநகரான மும்பையில் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து தாக்குதல் நடத்தி 175 பேரை பலி கொண்ட சர்வதேச தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மகனை செப்டம்பர் 26-ந் தேதி முதல் காணவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் பல்வேறு நாசகார செயல்களின் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத். ஜமாத் உல் தாவா என்ற பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனர். இது இ தொய்பா என்ற இன்னொரு பயங்கரவாத இயக்கத்தின் முன்னணி அமைப்பு.

ஜம்மு காஷ்மீரை மையப்படுத்திய இந்தியாவின் பெரும்பாலான தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கும் ஒட்டுமொத்த மூளையாக செயல்பட்டு வருவது ஹபீஸ் சயீத் மட்டும்தான்.
2008-ம் ஆண்டு இந்தியாவின் மும்பை மாநகரில் அஜ்மல் கசாப் உள்ளிட்ட 10 பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து நாட்டையே நிலைகுலையச் செய்த சம்பவத்தின் மூளையும் ஹபீஸ் சயீத்தான். மும்பை தாக்குதலில் மொத்தல் 175 பேரின் உயிரை குடித்த பயங்கரவாதி ஹபீஸ் சயீத், இந்தியா உள்ளிட்ட நாடுகளால் தேடப்படுகிற குற்றவாளி. சர்வதேச நாடுகளால் பிரகடனப்படுத்தப்பட்ட பயங்கரவாதி. ஆனால் பாகிஸ்தானில் படுசுதந்திரமாக வலம் வருகிறவர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் இருந்து ஹபீஸ் சயீத் மகன் கமாலுதீன் சயீத் நேற்று முதல் காணாமல் போயிருக்கிறார். தற்போது கமாலுதீன் சயீத் எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல் ஹபீஸ் சயீத் தலைமையிலான பயங்கரவாத கும்பல் விழிபிதுங்கி கிடக்கிறது.

மேலும் கமாலுதீன் சயீத்தை தேடும் பணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இறக்கிவிடப்பட்டது. ஆனாலும் ஐ.எஸ்.ஐ. அமைப்பால் கமாலுதீன் சயீத் கதி என்ன என்பது தெரியவில்லையாம். கமாலுதீன் சயீத், ஸ்கெட்ச் போடப்பட்டு மர்ம நபர்களால் தூக்கப்பட்டிருக்கலாம் என்கின்றன சர்வதேச ஊடகங்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் ஹபீஸ் சயீத் வீடு மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி இருந்தனர். ஆனால் அந்த தாக்குதல் முயற்சி வெற்றி பெறவில்லை. அத்தாக்குதல் நடத்த வந்த 3 பேர் பலியாகினர். இதனால் அத்தாக்குதலுக்கு பதிலடியாக அந்த மர்ம நபர்கள் கமாலுதீன் சயீத்தை தூக்கி இருக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் எழுப்பி உள்ளன.












Click it and Unblock the Notifications