முரசு, நீர் - புதிய புயல்களுக்கு தமிழில் பெயர் - மத்திய பாஜக அரசின் சபாஷ் நடவடிக்கை
டெல்லி: புதிய புயல்களுக்கு முரசு, நீர் என தமிழிலும் பெயரிட மத்திய பாஜக அரசு பரிந்துரைத்துள்ளது பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
Recommended Video
வங்க கடல், அரபிக் கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு பெயரிடும் முறை கடந்த 2014 -ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியா உட்பட 8 நாடுகள் இணைந்து மொத்தம் 64 பெயர்களை அப்போது தயாரித்தன.
இதனடிப்படையில் ஒவ்வொரு புயலுக்கும் பெயரிடப்பட்டு வந்தது. கடந்த 6 ஆண்டுகளில் 63 புயல்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. ஆம்பால் என்கிற பெயர் மட்டுமே சூட்டப்பட வேண்டும். இந்த பெயரை பரிந்துரைத்திருந்தது தாய்லாந்து.
தற்போது மேலும் சில நாடுகள் இணைந்து மொத்தம் 13 நாடுகள் கொண்ட கூட்டமைப்பு உருவாகி உள்ளது. இதனையடுத்து 13 நாடுகளும் எதிர்கால புயல்களுக்கு சூட்டுகிற 13 பெயர்களை பரிந்துரைத்துள்ளன.
இதில் இந்தியா சார்பில், முரசு மற்றும் நீர் என தமிழிலும் புயல்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது. தமிழர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு கடுமையாக விமர்சிக்கப்படுகிற நிலையி இந்த விமர்சனங்களுக்கு பதில் தரும் வகையில் புயல்களுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.