புல் புல் புயல் பாதிப்பு.. தேவைப்படும் உதவியை மத்திய அரசு செய்யும்.. மமதாவிடம் சொன்ன மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான 'புல்புல்' என பெயரிடப்பட்டிருந்தது. இந்த புயல், இன்று அதிகாலை 2.30 மணியளவில் மேற்கு வங்க கடலோரம் மற்றும் வங்கதேச எல்லை பகுதியில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ வரை அதிவேகமாக காற்று வீசியது.

இந்த புயல் காரணமாக, வங்கதேச தலைநகர் டாக்கா உள்பட பல்வேறு பகுதிகளிலும் நேற்று முழுவதும் மழை பெய்தது. இதன்பிறகு, வங்க கடலில் இருந்து சுந்தரவன கடலோர பகுதியை நோக்கி புல்புல் புயல் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது.

Narendra Modi speaks with Mamata Banerjee over cyclne Bulbul

இந்நிலையில், புல்புல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியிடம், பிரதமர் மோடி தொலைபேசியில், பேசி கேட்டறிந்தார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் ஏற்பட்ட புயல் மற்றும் பலத்த மழை குறித்து ஆய்வு செய்தேன். மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியுடனும் பேசியுள்ளேன். தேவைப்படும் அனைத்து உதவிகளும் மத்திய அரசால் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+