புல்வாமா தாக்குதலின்போது.. டீ, சமோசாவுடன் இமயமலையில் ஷூட்டிங்கில் இருந்தார் மோடி- காங்கிரஸ்
டெல்லி: புல்வாமா தாக்குதல் நடந்த போது ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் ஷூட்டிங்கில் இருந்தார் பிரதமர் நரேந்திர மோடி என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் 70-க்கும் மேற்பட்ட கான்வாய் வாகனங்களில் ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் 2500க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கடந்த வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனர். அப்போது தற்கொலை படை பிரிவை சேர்ந்த தீவிரவாதி வெடிப்பொருள் இருந்த காருடன் வீரர்களின் வாகனத்தில் மோதியதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகிவிட்டனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களும் இதை தன் வீட்டு துக்கமாக கருதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி
இந்த நிலையில் புல்வாமா தாக்குதல் நடந்த போது இமயமலையில் இருந்த மோடிக்கு புல்வாமா தாக்குதல் நடந்தது தெரிந்தும் அவர் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தார் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பிரதமர் மோடி
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில் புல்வாமா தாக்குதல் கடந்த வியாழக்கிழமை (பிப் 21) நடந்த போது நேரம் மதியம் 3.10 இருக்கும். அந்த நேரத்தில் ஜிம் கார்பெட் பூங்காவில் இருந்த பிரதமர் மோடி மாலை 6.30 மணி வரை இருந்தார்.

பிஸி
பின்னர் தன்கார்ஹி கேட் வழியாக அவர் வெளியே வந்த போது 6.40 மணியாக இருந்தது. புல்வாமா தாக்குதல் குறித்து தெரிந்திருந்தும் அவர் எந்த வித அறிக்கையையும் விடவில்லை. புல்வாமா தாக்குதலில் வீரர்களை இழந்து நாடே சோகத்தில் மூழ்கியிருக்கும் போது முதலைகளுக்கு மத்தியில் ஆவணப்படத்துக்கான ஷூட்டிங்கில் மோடி பிஸியாக இருந்துள்ளார்.

மௌனம்
இது போன்ற பிரதமர் உலகில் வேறெங்காவது பார்த்திருப்போமா. இதையடுத்து ராம்நகர் பொதுப் பணித் துறை விருந்தினர் மாளிகைக்கு இரவு 7.10 மணிக்கு வந்த மோடி அங்கு டீ, சமோசாவை சாப்பிட்டுள்ளார். ஆக சம்பவம் நடந்த 4 மணி நேரமாக அவர் மௌனம் காத்துள்ளார் என்று குற்றம்சாட்டினார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்










Click it and Unblock the Notifications