Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

73-வது சுதந்திர தினம்... Live: முப்படைக்கும் இனி ஒரே தலைவர்.. பிரதமர் மோடி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று தேசம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார். இதனையடுத்து செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

Aug 15, 2019, 10:33 am IST

லடாக் அருகே உள்ள பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரில் லடாக் அருகே உள்ள பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
Aug 15, 2019, 10:26 am IST

ஸ்ரீநகரில் தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் சத்யபால் மாலிக். ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதை அடுத்து ஸ்ரீநகரில் மூவர்ணக் கொடி ஏற்றம்.
Aug 15, 2019, 9:21 am IST

வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிப்பு. திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடங்களாகக் கொண்டு வேலூர் 3 மாவட்டங்களாக பிரிப்பு. சுதந்திர தின உரையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு
Aug 15, 2019, 9:08 am IST

வங்கதேசம், சீனா , ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் கூட தீவிரவாத தாக்குதல் நடந்தது. நாம் அதை எல்லாம் கண்டித்து இருக்கிறோம் - பிரதமர் மோடி
Aug 15, 2019, 9:08 am IST

தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தீவிரவாதத்திற்கு எதிராக நாம் இனியும் அமைதியாக இருக்க முடியாது. - பிரதமர் மோடி
Aug 15, 2019, 9:08 am IST

தீவிரவாதத்திற்கு எதிராக நாம் கடுமையாக செயல்பட்டு வருகிறோம். நாட்டின் பாதுகாப்பு தற்போது முக்கிய பிரச்சனையாகி உள்ளது. - பிரதமர் மோடி
Aug 15, 2019, 8:57 am IST

முப்படைக்கும் இனி ஒரே தலைவர் இருப்பார். தரைப்படை, விமானப்படை, கடற்படை மூன்றுக்கும் இனி ஒரே தலைமை இருக்கும் . தலைமை பாதுகாப்பு அதிகாரி நியமனம் செய்யப்படுவார் - பிரதமர் மோடி
Aug 15, 2019, 8:54 am IST

முப்படைக்கும் இனி ஒரே தலைவர் - பிரதமர் மோடி அறிவிப்பு
Aug 15, 2019, 8:54 am IST

மூன்று டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறோம். இந்த இலக்கை நாம் கண்டிப்பாக அடைய முடியும். - பிரதமர் மோடி
Aug 15, 2019, 8:48 am IST

கட்டமைப்பு பணிகளுக்காக ரூபாய் 100 லட்சம் கோடி செலவு செய்யப்படும். ரயில்வே, விமானத்துறை, சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் மொத்தமாக புதுப்பிக்கப்படும் - பிரதமர் மோடி
Aug 15, 2019, 8:42 am IST

கடந்த 5 வருடத்தில் 1,450 சட்டங்களை நீக்கியுள்ளோம். மக்களின் சுதந்திரத்தை கருத்தில் கொண்டு இந்த சட்டங்களை நீக்கி இருக்கிறோம்.- பிரதமர் மோடி
Aug 15, 2019, 8:42 am IST

மக்களுக்கு மத்திய அரசு முழு சுதந்திரம் அளிக்க போகிறது. அவர்களின் வாழ்க்கையில் நாங்கள் இனி தலையிட மாட்டோம். மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அரசு தலையிட கூடாது - பிரதமர் மோடி
Aug 15, 2019, 8:37 am IST

ஒரே நாடு ஒரே தேர்தலும் இப்படித்தான். மக்களின் வரிப்பணம் இதன் மூலம் சேமிக்கப்படும். இதுகுறித்த விவாதங்கள் நடந்து வருகிறது. இந்த விவாதங்கள் நல்ல முறையில் நடக்க வேண்டும். இதில் விரைவில் நல்ல முடிவுகள் எடுக்கப்படும் - பிரதமர் மோடி
Aug 15, 2019, 8:37 am IST

ஜிஎஸ்டி மூலம் நாடு முழுக்க ஒரே வரி விதிப்பு முறை அமலுக்கு வந்து இருக்கிறது. இதன் மக்கள் சரியாக வரி கட்ட முடிகிறது. நாட்டிற்கு இதனால் அதிக வருவாய் கிடைத்துள்ளது - பிரதமர் மோடி
Aug 15, 2019, 8:27 am IST

முதலில் நாம் வறுமையை ஒழிக்க வேண்டும். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதால் இது சாத்தியமாகும். இதற்காக நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் - பிரதமர் மோடி
Aug 15, 2019, 8:23 am IST

அதிகரித்து வரும் மக்கள் தொகை குறித்து நாம் கவலை அடைய வேண்டும். நாட்டில் ஊழல் பெரிய வியாதி போல வளர்ந்து இருக்கிறது - பிரதமர் மோடி
Aug 15, 2019, 8:23 am IST

நீர் தேவையை பூர்த்தி செய்து, தண்ணீர் பஞ்சத்தை போக்குவோம். நீர் திட்டங்களுக்காக ரூபாய் 3.50 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறோம். இதற்காக திட்டங்களை கொண்டு வருவோம் - பிரதமர் மோடி
Aug 15, 2019, 8:23 am IST

ஒரே நாடு, ஒரே அரசமைப்பு சட்டத்தை செயல்படுத்தியதில் பெருமிதம் கொள்கிறோம்.- பிரதமர் மோடி
Aug 15, 2019, 8:17 am IST

சுதந்திர தின உரையில் திருக்குறளை எடுத்துக்காட்டி கூறிய பிரதமர் மோடி. தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து விளக்கும்போது நீரின்றி அமையாது உலகு என தமிழில் பேசினார் மோடி.
Aug 15, 2019, 8:13 am IST

இந்தியா முழுக்க தலித் மக்களுக்கு நிறைய நலத்திட்டங்கள் உள்ளது. ஆனால் காஷ்மீரில் அப்படி இல்லை - பிரதமர் மோடி
Aug 15, 2019, 8:13 am IST

காஷ்மீர் பெண்கள் சரியான அளவில் சுதந்திரம் அடைய வேண்டும். அவர்களுக்கான திட்டங்கள் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். காஷ்மீரும் இந்தியாவில்தான் இருக்கிறது. - பிரதமர் மோடி
Aug 15, 2019, 8:10 am IST

காஷ்மீரை முன்னேற்ற 130 கோடி மக்கள் கரம் கோர்த்து இருக்கிறார்கள். லடாக் மக்கள் பெரும் மகிழ்ச்சியியல் உள்ளனர். நாம் நமது மிகப்பெரிய கடமையை நிறைவேற்றி விட்டோம். இது என்னுடைய தனிப்பட்ட சாதனை அல்ல. - பிரதமர் மோடி
Aug 15, 2019, 8:09 am IST

இரண்டு அவையிலும் எங்களுக்கு எம்பிக்கள் ஆதரவு உள்ளது. இதன் மூலம் நாங்கள் வேகமாக சட்டங்களை இயற்றி வருகிறோம். - பிரதமர் மோடி
Aug 15, 2019, 8:08 am IST

70 வருடத்தில் செய்ய முடியாததை 70 நாளில் செய்து இருக்கிறோம். காஷ்மீரில் கொண்டு வந்த சீர்திருத்தம் நாங்கள் செய்த சாதனை. - பிரதமர் மோடி
Aug 15, 2019, 8:01 am IST

நாம் யோசிக்க தொடங்கிவிட்டோம். 130 கோடி மக்களும் சேர்ந்து செயல்பட தொடங்கிவிட்டோம். மக்கள் தங்கள் கனவுகளுக்காக தீமைகளை எதிர்த்து போராடி வருகிறார்கள். - பிரதமர் மோடி
Aug 15, 2019, 7:59 am IST

எங்களுடைய பணிகள் நாட்டில் நிறைய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மக்கள் எங்களை முழுதாக நம்புகிறார்கள். இந்தியா மாற முடியும் என்று நம்புகிறார்கள்
Aug 15, 2019, 7:57 am IST

சிறுபான்மையினரை முன்னேற்ற நிறைய திட்டம் இருக்கிறது. ஆதிவாசிகளை முன்னேற்ற திட்டமிட்டுள்ளோம். வரும் நாட்களில் செயல்படுத்துவோம் - பிரதமர் மோடி
Aug 15, 2019, 7:57 am IST

கடந்த ஐந்து வருடங்களில் மருத்துவ துறை பெரிதாக வளர்ந்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான அநீதிகள் தடுக்கப்பட்டு உள்ளது. - பிரதமர் மோடி
Aug 15, 2019, 7:57 am IST

நீர் மேலாண்மைக்காக நலத்திட்டங்கள் நிறைய கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகள் நாட்டில் மகிழ்ச்சியாக உள்ளனர். - பிரதமர் மோடி
Aug 15, 2019, 7:52 am IST

நாட்டில் பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். முத்தலாக் தடை சட்டம் மூலம் இஸ்லாமிய பெண்கள் விடுதலை அடைந்துள்ளனர் - பிரதமர் மோடி
READ MORE

Nation celebrates 73rd Independence Day
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+