Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிபி ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா சொன்ன வாழ்த்து.. ஜனாதிபதி முர்மு தந்த சிறப்பான பாராட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்ற விவாதத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த துணைத் தலைவராக சிபி ராதாகிருஷ்ணன் இருப்பார் என்று மோடி தன்னுடைய வாழ்த்துப்பதிவில் தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு பயனளிக்கும். வெற்றிகரமான பதவிக்காலத்துக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜனாதிபதி முர்முவும் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

இந்திய குடியரசு துணைத்தலைவர் தேர்தல் இன்று காலை ஆரம்பமானது.. தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் (67), தமிழ்நாட்டை சேர்ந்தவரும், மகாராஷ்டிர ஆளுநருமானவர் களமிறங்கினார்.

ராதாகிருஷ்ணன் முன்னிலை

இந்தியா கூட்டணி சார்பில் பி. சுதர்சன் ரெட்டி (79), தெலங்கானாவை சேர்ந்த சுப்ரீம்கோர்ட் முன்னாள் நீதிபதியும் போட்டியிட்டனர்.. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக துவங்கியது.. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது.. இதில் முதலிலிருந்தே தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணனே முன்னனியில் இருந்தார்.

National Leaders congratulate Sr Leader CP radhakrishnan and PM Modi Amit shah congratulate sibi radhakrishnan elected vice president

மொத்தம் 767 உறுப்பினர்கள் குடியரசு துணை தலைவர் தேர்தலில் வாக்களித்த நிலையில், சி.பி. ராதாகிருஷ்ணன் 452 முதல் விருப்பு வாக்குகளை பெற்றார்... சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளையே பெற்றிருந்தார்.. இறுதியில் 152 ஓட்டு வித்தியாசத்தில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, சிபி ராதாகிருஷ்ணன் நம்முடைய நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குவியும் வாழ்த்துக்கள்

துணை ஜனாதிபதியாகியுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்துகூறியிருக்கிறார்.. தன்னுடைய வாழ்த்தில், துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டுகள். பொது வாழ்க்கையில் உள்ள நீண்ட அனுபவம் , நாட்டின் வளர்ச்சிக்கு பயனளிக்கும். வெற்றிகரமான பதவிக்காலத்துக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பாராட்டியிருக்கிறார்.

அதேபோல ராதாகிருஷ்ஷனுக்கு பிரதமர் மோடியும் மனதார வாழ்த்து தெரிவித்துள்ளார்... இது குறித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:

அதிகாரம் வாழ்க்கை

"2025 துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அவரது வாழ்க்கை எப்போதும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

அவர் நமது அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்தி, நாடாளுமன்ற விவாதத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த துணைத் தலைவராக இருப்பார் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்..

மூத்த தலைவர் அமித்ஷா

அதேபோல மூத்த தலைவர் அமித் ஷா தன்னுடைய வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.. தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "நாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்...

சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து எழுந்த ஒரு தலைவராக உங்கள் நுண்ணறிவும், நிர்வாகத்தைப் பற்றிய ஆழமான அறிவும், நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சிறந்ததை வெளிப்படுத்தி ஒதுக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வதில் உதவும் என்று உறுதியாக நம்புகிறேன்.
அவையின் புனிதத்தின் பாதுகாவலராக உங்கள் பயணத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+