2020-ம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் 1.20 லட்சம் பேர் மரணம்... தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை..!
டெல்லி: நாடு முழுவதும் 2020-ம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் 1.20 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த போதும் சாலை விபத்துக்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் குறைந்தபாடில்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
கடந்தாண்டு இந்தியா முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 328 பேர் சாலை விபத்தால் உயிரிழந்திருக்கிறார்கள். இதனிடையே கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 3.92 லட்சம் பேர் சாலை விபத்துக்களால் மரணம் அடைந்துள்ளனர் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு 1 லட்சத்து 35 ஆயிரம் பேரும், 2019-ம் ஆண்டு 1 லட்சத்து 36 ஆயிரம் பேரும் விபத்துக்களில் சிக்கி நாடு முழுவதும் பலியாகியுள்ளனர். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், 2018-ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு லட்சத்து 35 ஆயிரம் விபத்துக்களில் 41 ஆயிரத்து 196 வழக்குகள் ஹிட் அண்ட் ரன் பிரிவில் பதியப்பட்டுள்ளது.
இதேபோல் 2019-ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு லட்சத்து 36 ஆயிரம் விபத்துக்களில், 47 ஆயிரத்து 028 வழக்குகள் ஹிட் அண்ட் ரன் பிரிவில் பதியப்பட்டுள்ளது. மேலும், கடந்தாண்டு மட்டும் 1.30 லட்சம் வழக்குகள் கவனக்குறைவாக வாகனங்களை இயக்குதல் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை இயக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் பதியப்பட்டுள்ளது.
சாலை விபத்துக்கள் ஒரு பக்கம் என்றால் மற்றொரு புறம் ரயில் விபத்துக்களும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. கடந்த 2020-ம் ஆண்டு 52 பேர் நாடு முழுவதும் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர். இதேபோல் கடந்த 2018-ம் ஆண்டு 40 பேரும் 2019-ம் ஆண்டு 147 பேரும் நாடு முழுவதும் ரயில் விபத்தில் சிக்கியிருக்கிறார்கள் என்ற விவரத்தையும் தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
மார்ச் 25-ம் தேதி 2020 முதல் மே 31-ம் தேதி 2020 வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டதால், இந்த காலகட்டத்தில் கொலை, கொள்ளை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான செயல்கள், உள்ளிட்ட குற்றங்கள் குறைந்து காணப்பட்டதாகவும் தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் தெரிய வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications