எங்கள் நாட்டு இறையாண்மையை மதிக்க வேண்டும்.. நேபாளத்திற்கு இந்தியா கண்டனம்.. தொடரும் உரசல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய நிலப்பரப்புகளை தங்கள் எல்லையில் சேர்த்து நேபாள அரசு அட்டகாசம் செய்துள்ளது. இதற்கு அந்தந்த நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஆனால் இதனை ஏற்க முடியாது என்று இந்தியா இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது

சீனக் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் மானசரோவர் பகுதிக்கு நுழைவாயிலாக இருக்கும் லிபுலேக் கணவாய்க்கு செல்லும் எல்லையோர சாலை ஒன்றை இந்தியா இம்மாத தொடக்கத்தில் ஆரம்பித்தது. இது சீனாவை கோபப்படுத்தியதோடு, நேபாளமும் திடீரென கோபத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது.

தங்கள் நாட்டு எல்லை வழியாக இந்த சாலை செல்வதாக நேபாளம் கூறினாலும், இது தவறான தகவல் என இந்தியா தெரிவித்தது. இந்நிலையில், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இந்தியாவுடன், சர்ச்சைக்குரிய நிலங்கள் அடங்கிய, புதிய தேசிய வரைபடத்தை வெளியிட ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதிய வரைபடம்

புதிய வரைபடம்

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பகுதிகள் லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகியவை. இதை தங்கள் நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடத்திற்கு அந்த நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நேபாள பிரதமர் கருத்து

நேபாள பிரதமர் கருத்து

மேலும், செய்தியாளர்களிடம் பேசிய நேபாள பிரதமர் இந்தியாவை சீண்டும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார். இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நேபாளத்தில் குடியேற்றியவர்களால், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதாகவும், சீனா, இத்தாலி போன்ற நாட்டு வைரஸ்கள் எவ்வளவோ பரவாயில்லை. இந்திய வைரஸ்தான் நேபாளத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று மோசமான கருத்தை தெரிவித்திருந்தார்.

ஒருதலைபட்சம்

ஒருதலைபட்சம்

இந்த நிலையில் இன்று இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் நேபாளம் நாடு உருவாகியுள்ள புதிய வரைபடம் இந்தியாவின் பகுதிகளையும் உள்ளடக்கி உள்ளது. எந்த ஒரு வரலாற்று ஆதாரமும், பின்புலமும் இல்லாமல் இப்படி ஒரு ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை நேபாள அரசு எடுத்துள்ளது.

வெளியுறவு அமைச்சகம்

வெளியுறவு அமைச்சகம்

இந்தியாவின் இறையாண்மையை நேபாளம் மதிக்க வேண்டும். பிராந்திய ஒருங்கிணைப்பை பேண வேண்டும், என்று அந்த நாட்டு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+