இனி பாஸ்ட் டாக் கூட தேவையில்லை.. எல்லாமே ஜிபிஎஸ்தான்.. வருகிறது புதிய டோல் கட்டண முறை!
டெல்லி: நாடு முழுக்க அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்றி, ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது எப்படி செயல்படும் என்று விவரங்கள் வெளியாகி உள்ளன.
ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை இயக்க, அனைத்து வாகனங்களுக்கும் ஜிபிஎஸ் (குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்) இருப்பது அவசியம். அரசாங்கம் திட்டமிட்டுள்ளபடி, இது மூன்றாம் தலைமுறை (3ஜி) மற்றும் ஜிபிஎஸ் இணைப்புடன் கூடிய மைக்ரோ-கண்ட்ரோலரின் உபகரணங்களின் மூலமாக இயங்கும்.

ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் வாகனங்களின் ஜி.பி.எஸ் ரெக்கார்டுகளை அரசு பெற்று அவற்றை தொடர்ந்து கண்காணிக்க முடியும். எனவே, அவர்கள் பயணிக்கும் வாகனங்களின் வழித்தடத்தையும், அவர்கள் எடுக்கும் சுங்கச்சாவடிகள் ரூட் என்ன என்பதையும் அரசு தெரிந்து கொள்ளும். அவர்கள் எத்தனை டோல் கேட்களைக் கடந்து செல்கிறார்கள் என்பதைச் சரிபார்த்து மொத்த டோல் வரியைக் கணக்கிடலாம்.
அதாவது வாகனங்கள் எந்த இடத்திற்கு எல்லாம் பயணம் செய்துள்ளது என்பதை கண்டுபிடித்து அதன் மூலம் ஜிபிஎஸ் பயன்படுத்தி நேரடியாக டோல் கட்டணம் வசூலிக்கப்படும்.
டோல் கட்டணம்: விரைவில், இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான டோல் கட்டண முறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. டோல் கட்டண முறைகேடுகளை தவிர்ப்பது, பொய்யான டோல் கட்டண முறையை தடுப்பதற்காக இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.
நாடு முழுக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) விரைவில் புதிய முறையை அறிமுகப்படுத்தும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மார்ச், 2024க்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண முறையை NHAI அறிமுகப்படுத்தும் என்று அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
தற்போது பாஸ்ட் டாக் கட்டண முறை உள்ளது. இந்த சாட்டிலைட் முறை வந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக சுங்கச்சாவடிகள் மூடப்படும்.
சுங்கச்சாவடி கட்டணம் : சாலை போக்குவரத்து அமைச்சகம்: சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் தரவுகளின்படி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏஜென்சிகள் நவம்பர் மாதத்திற்குள் 5,248 கிமீ தேசிய நெடுஞ்சாலைகளை நிறைவு செய்துள்ளன அல்லது விரிவுபடுத்தியுள்ளன.
இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 4,766 கிமீ ஆகும். சுமார் 12,000 கி.மீ.களை நிர்மாணித்து விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் இலக்கு இருந்தபோதிலும், இந்த நிதியாண்டில் இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த இலக்கை அடைவது வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.,
புதிய திட்டங்களுக்கான ஏலத்தின் வேகம் முந்தைய ஆண்டை விட கணிசமாக குறைந்துள்ளது. 2022-23 ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில், ஏஜென்சிகள் 5,382 கி.மீ பணிக்கு ஏலம் எடுத்திருந்த நிலையில், இந்த ஆண்டு அது 2,815 கி.மீ.யை எட்டவில்லை. பாரத்மாலா கட்டம்-1 அல்லது மாற்று திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்படுவது, திட்ட ஏலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவது உட்பட பல காரணங்களால் சாலைகள் போடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு திட்டங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை 2024-25 நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்படும். இனி வரும் ஆண்டுகளில் அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் பாரத்மாலா திட்டத்தின் கீழ் புதிய திட்டங்களைத் தொடங்க வேண்டாம் என்று நிதி அமைச்சகம் சாலை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. பாரத் மாலா முதன்மைத் திட்டத்தின் கீழ் 8,000 கிமீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் விரைவில் போடப்படும் என்று கூறப்படுகிறது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications