Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெருப்போடு விளையாடுறீங்க.. நிர்பயா குற்றவாளிகளின் வழக்கறிஞருக்கு டெல்லி நீதிமன்றம் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க டெல்லி நீதிமன்றம் மறுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மிகமோசமான.பாலியல் வன்கொடுமை கொலையில் ஈடுபட்ட நான்கு பேருக்கு நாளை காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம் தற்போது தண்டனையை நிறைவேற்ற தடை விதித்துள்ளது.

டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா கடந்த 2012ம் ஆண்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (33) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களை நாளை அதாவது மார்ச் 3ம் தேதி டெல்லி திகார் சிறையில் தூக்கிலட வேண்டும் என்று கடந்த 17ம் தேதி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 Nirbhaya Case: Delhis Court reserved order on convict Pawan Guptas plea

இந்த வழக்கில் இதுவரை முகேஷ் குமார் சிங், வினய் குமார் சர்மா மற்றும் அக்‌ஷய் குமார் ஆகிய மூன்று குற்றவாளிகளின் கருணை மனுக்கள் ஏற்கனவே ஜனாதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதில அக்சய் குமார் மனு கடந்த சரியாக தாக்கல் செய்யாத காரணத்தால் இரண்டாவது முறையாக கருணை மனு அனுப்பி இருந்தார்.

இதேபோல் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி ,குற்றவாளி பவன் குப்தா உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதே மனுவில் மார்ச் 3 ம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என டெல்லி நீதிமன்றம் விதித்த உத்தரவு தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறிருந்தார். ஆனால் இரு கோரிக்கைகளைம் உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

இதையடுத்து பவன் குப்தா குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். இந்நிலையில் கருணை மனு அனுப்பி உள்ளதை சுட்டிக்காட்டி, நாளை தனக்கு மரண தண்டனை நிறைவேற்றக்கூடாது என டெல்லி பாட்டியலா நீதிமன்றத்தில் பவன் குப்தா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், நிர்பயா குற்றவாளிகளின் வழக்கறிஞரை நெருப்போடு விளையாடுகிறீர்கள், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாராலும் ஒரு தவறான நடவடிக்கையில் இறங்கினால், அதன் விளைவுகள் என்ன என்று உங்களுக்குத் தெரியும் என்றார். இதனிடையே பவன் குப்தா கருணை மனு தாக்கல் செய்த சில மணிநேரத்தில் அவரது மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+