நெருப்போடு விளையாடுறீங்க.. நிர்பயா குற்றவாளிகளின் வழக்கறிஞருக்கு டெல்லி நீதிமன்றம் எச்சரிக்கை
டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க டெல்லி நீதிமன்றம் மறுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மிகமோசமான.பாலியல் வன்கொடுமை கொலையில் ஈடுபட்ட நான்கு பேருக்கு நாளை காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம் தற்போது தண்டனையை நிறைவேற்ற தடை விதித்துள்ளது.
டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா கடந்த 2012ம் ஆண்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (33) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களை நாளை அதாவது மார்ச் 3ம் தேதி டெல்லி திகார் சிறையில் தூக்கிலட வேண்டும் என்று கடந்த 17ம் தேதி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் இதுவரை முகேஷ் குமார் சிங், வினய் குமார் சர்மா மற்றும் அக்ஷய் குமார் ஆகிய மூன்று குற்றவாளிகளின் கருணை மனுக்கள் ஏற்கனவே ஜனாதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதில அக்சய் குமார் மனு கடந்த சரியாக தாக்கல் செய்யாத காரணத்தால் இரண்டாவது முறையாக கருணை மனு அனுப்பி இருந்தார்.
இதேபோல் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி ,குற்றவாளி பவன் குப்தா உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதே மனுவில் மார்ச் 3 ம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என டெல்லி நீதிமன்றம் விதித்த உத்தரவு தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறிருந்தார். ஆனால் இரு கோரிக்கைகளைம் உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
இதையடுத்து பவன் குப்தா குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். இந்நிலையில் கருணை மனு அனுப்பி உள்ளதை சுட்டிக்காட்டி, நாளை தனக்கு மரண தண்டனை நிறைவேற்றக்கூடாது என டெல்லி பாட்டியலா நீதிமன்றத்தில் பவன் குப்தா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், நிர்பயா குற்றவாளிகளின் வழக்கறிஞரை நெருப்போடு விளையாடுகிறீர்கள், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாராலும் ஒரு தவறான நடவடிக்கையில் இறங்கினால், அதன் விளைவுகள் என்ன என்று உங்களுக்குத் தெரியும் என்றார். இதனிடையே பவன் குப்தா கருணை மனு தாக்கல் செய்த சில மணிநேரத்தில் அவரது மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications