டெல்லி தேர்தல்: கெஜ்ரிவாலுக்கு எதிராக காங். வேட்பாளராக போட்டியா? நிர்பயா தாயார் விளக்கம்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடப் போவதாக வெளியான செய்திகளை நிர்பயா தாயார் மறுத்துள்ளார்.
டெல்லி சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்வரி 8-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் களத்தில் ஒவ்வொருநாளும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது.

தற்போது நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிடும் விவகாரத்தில் டெல்லி அரசு தாமதிக்கிறது என்கிற குற்றச்சாட்டு பேசுபொருளாகி இருக்கிறது. ஆனால் முதல்வர் கெஜ்ரிவால் இதில் அரசு தரப்பு எந்த தாமதமும் செய்யவில்லை என விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்நிலையில் கெஜ்ரிவாலை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி போட்டியிடுவார் என்கிற தகவலும் பரவியது. இது தொடர்பாக ஆஷா தேவி கூறியதாவது:
எனக்கு அரசியலில் எந்த ஒரு விருப்பமும் இல்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யாரிடமும் நான் பேசவும் இல்லை.
எனக்கு தேவை என்னுடைய மகளின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்பதுமட்டும். என் மகளின் மரணத்துக்குக் காரணமான குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். இவ்வாறு ஆஷா தேவி கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications