மக்கள் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யுமா மத்திய அரசு? நிர்மலா சீதாராமன் இன்று என்ன அறிவிப்பார்?
டெல்லி: கோவிட் -19ன் பொருளாதார தாக்கத்தை சமாளிப்பதற்கான அறிவிப்புகளை, நாடாளுமன்றத்தில், இன்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, சமீபத்தில் தொலைக்காட்சியில் உரையாற்றியபோது பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும் இதை சரி செய்வதற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பொருளாதார பணி குழு அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இந்த குழு சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசனை நடத்தி உரிய மீட்பு நடவடிக்கைகளை எடுக்கும் என்று மோடி கூறியிருந்தார்.
இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். நாடாளுமன்றத்தில் இன்று நிதி மசோதா மீதான பதில் உரையின்போது அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடக் கூடும் என்று தெரிகிறது.
வைரஸ் பாதிப்பு காரணமாக, தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன, பலரும் பணிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர், எனவே அவர்களுக்கு மத்திய அரசு உதவிகளை அறிவிக்கும் என்று தெரிகிறது.
குடிமக்களுக்கு உணவுப் பொருள் வினியோகம் சரியாக சென்றடைய வேண்டியது அவசியம், ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் குறிப்பிட்ட அளவுக்கு பணத்தை மத்திய அரசு டெபாசிட் செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் நிர்மலா சீதாராமன் எந்த மாதிரியான அறிவிப்பை வெளியிடப் போகிறார், என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஒருவேளை, அரசின் நிதி நிலையை மேம்படுத்த, சில வரியை அதிகரிப்பதாக அறிவித்துவிடுவோரா என்ற சந்தேகமும் நிலவுகிறது. எனவே நிர்மலா சீதாராமன் அறிவிப்பு மீதே அனைவர் கண்களும் உள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications