விவசாயத் துறை கட்டமைப்புக்கு ரூ.1 லட்சம் கோடி.. தமிழகத்தில் மரவள்ளி கிழங்கு கிளஸ்டர்- நிர்மலா அதிரடி
டெல்லி: விவசாயத்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Recommended Video
இன்று மாலை 4 மணிக்கு 3வது கட்டமாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்து வருகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பிரதமர் மோடி கடந்த 12ம் தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது, கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து அந்த திட்டம் பற்றிய தகவல்களை நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தெரிவித்தார். 'சுயசார்பு இந்தியா' என்ற தலைப்பிலான இந்த தொலைநோக்கு திட்டம் சுய சார்பை உறுதிப்படுத்தும் என்றார்.
சிறு, குறு நிறுவனங்களுக்கான சலுகைகள் ஆகியவற்றுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து, நேற்று நிர்மலா சீதாராமன் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்த 2ம் கட்ட சந்திப்பில் அவர் புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு விவசாயிகள், சிறு வியாபாரிகள், சாலையோர வியாபாரிகளுக்கான சலுகை திட்டங்களையும் அறிவித்தார்.
இதையடுத்து இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அவர் கூறியதாவது:
விவசாயம், கால்நடை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளுக்கான 11 வகை திட்டங்கள் இன்று அறிவிக்கப்படுகின்றன. அவற்றில் 8 உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து சார்ந்ததாக இருக்கும். மீதமுள்ள 3 நடவடிக்கைகள், ஆளுகை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பானவை.
பால் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முன்னோடியான நாடாக உள்ளது. சுய சார்பு திட்டத்தின்கீழ், ஒவ்வொரு மாநிலத்தின் உள்ளூர் பொருளும் இலக்கு வைத்து உற்பத்தி பெருக்கப்படும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
கர்நாடகாவில் ராகி அதிகம் விளைகிறது, வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில், பழங்கள், தெலுங்கானாவில் மஞ்சள், ஆந்திராவில் மிளகாய், காஷ்மீரில் குங்குமப்பூ, தமிழகத்தில் மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு வகையான விளைபயிர்கள் புகழ் பெற்றவை. இவற்றை கிளஸ்டராக மாற்ற, ரூ.10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தந்த கிளஸ்டர் பகுதிகள் மேம்படுத்தப்படும்.
பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் இதில் முக்கியத்துவம் பெறுவார்கள். கொள்முதல் நிலையங்கள் மற்றும் குளிர்பதன கிடங்குகள் ஒரு லட்சம் கோடியில் மேம்படுத்தப்படுகிறது. மீன்வளத்துறை மேம்படுத்துவதற்காக 20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். விவசாயத்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் அறிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications