நித்தி வழக்கில் திடீர் திருப்பம்.. 2 பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்
Recommended Video
டெல்லி: நித்யானந்தா வழக்கு தொடர்பாக அவரது பெண் சீடர்களும் ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஹாஜீபூரில் ஒரு பள்ளியை ஆக்கிரமித்து நித்யானந்தாவின் ஆசிரமம் இயங்கி வந்தது. இந்த ஆசிரமத்தில் நித்யானந்தாவின் முன்னாள் செயலாளர் ஜனார்த்தன சர்மாவின் 3 மகள்களும் ஒரு மகனும் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆசிரமத்தில் தனது குழந்தைகள் சித்திரவதை செய்யப்படுவதாகவும் அவர்களை மீட்டுத் தரும்படியும் அகமதாபாத் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து ஆசிரமத்தில் சோதனை நடத்தி அவரது ஒரு மகள், ஒரு மகனை போலீஸார் மீட்டனர்.

குஜராத் ஹைகோர்ட்
எனினும் அவரது 18 வயதுக்கு மேற்பட்ட இரு மகள்கள் ஆசிரமத்தில் இல்லை. அவர்கள் நித்யானந்தாவுடன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்டுத் தரக் கோரி ஜனார்த்தன சர்மா குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

லைவாக பேச்சு
இந்த நிலையில் நித்யானந்தா ஈகுவடார் நாட்டுக்கு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு அவர் இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்தது. தலைமறைவாக இருந்தாலும் அவ்வப்போது நித்யானந்தா லைவாக தோன்றி பேசி வருகிறார்.

பனாமா கால்வாய்
அவரது வீடியோக்கள் வெளியிடப்படும் கம்ப்யூட்டரின் ஐபி முகவரியை வைத்து ஆய்வு செய்ததில் அவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கும் பனாமா கால்வாய்க்கும் இடையே ஒரு இடத்தில் தங்கியிருக்கலாம் என தெரிகிறது.

டிரினிடாட்
இதனிடையே ஜனார்த்தன சர்மாவின் 2 மகள்களும் நித்யானந்தாவின் சீடர்களாகிவிட்டனர். வழக்கு விசாரணையில் சர்மாவின் மகள்கள் சாலை மார்க்கமாக நேபாளம் சென்றுள்ளனர். அங்கிருந்து கரீபியன் தீவான டிரினிடாட்டுக்கு சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

விர்ஜீனியாவில்
இந்த நிலையில் சர்மாவின் மகள்கள் சார்பில் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கள் தந்தை சர்மாவுடன் செல்ல விருப்பம் இல்லை என்றும் அமெரிக்காவின் விர்ஜீனியாவில் தங்கியிருப்பதாகவும் ஆனால் சரியான முகவரி தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர். அப்படியென்றால் நித்யானந்தாவும் விர்ஜீனியாவில் இருக்கலாம் என தெரிகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications