Poll முடிவுகளால் நித்தி ஷாக்.. இந்தியாவுக்கு வரும் திட்டம் இல்லையாம்.. பகீர் முடிவுக்கு என்ன காரணம்?
டெல்லி: தான் இந்தியாவுக்கு திரும்பி வரும் போது யார் பிரதமராக இருப்பார் என்ற கேள்விக்கு கிடைத்த பதிலால் ஆடி போன நித்யானந்தா தான் இந்தியாவுக்கு வரும் திட்டத்தையே கைவிட்டு விட்டதாக ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் நித்யானந்தா. இவர் இன்னமும் போலீஸ் கையில் சிக்காமல் உள்ளார்.
அண்மையில் கூட குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு ஆசிரமத்தில் குழந்தைகளை அடைத்துவைத்திருந்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் ஆசிரம நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கலாய்த்தல்
எனினும் நித்யானந்தா தலைமறைவாகவே இருந்து வருகிறார். ஆயினும் அவர் போலீஸாரையோ மற்றவர்களையோ கலாய்ப்பதை விடவே இல்லை. ட்விட்டரில் படு ஆக்டிவாக இருக்கிறார். பிஎம்ஓ கைலாஷ் என்ற ட்விட்டர் ஹேண்டிலில் அவர் தான் இந்தியா திரும்பும் போது யார் பிரதமராக இருப்பர் என கேள்வி கேட்டு அதற்கு 4 ஆப்ஷன்களையும் அளித்துள்ளார்.

20 சதவீதம்
அதில் டொனால்ட் டிரம்ப், ராகுல் காந்தி, நரேந்திர மோடி, சசிகலா ஆகிய 4 ஆப்ஷன்கள் உள்ளன. இதில் இரு ஆப்ஷன்கள் கூட பரவாயில்லை. ஆனால் மீதம் உள்ள இரு ஆப்ஷன்களை பார்த்தாலே தலை சுற்றுகிறது. எனினும் இவர் கேட்ட 4 ஆப்ஷன்களுக்கும் பதில் கிடைத்துள்ளது. டிரம்ப் பிரதமராக இருப்பார் என 12 சதவீதம் பேரும், ராகுல் காந்தி பிரதமராக இருப்பார் என 20 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

523 வாக்குகள்
அது போல் நரேந்திர மோடிதான் பிரதமராக இருப்பார் என 28 சதவீதம் பேரும் சசிகலா தான் பிரதமர் என 40 சதவீதம் பேர் பதில் அளித்துள்ளனர். இந்த கேள்விக்கு மொத்தம் 523 பேர் வாக்களித்துள்ளனர். மோடி, ராகுல் கூட ஓகே. ஆனால் சம்பந்தமே இல்லாமல் டிரம்பையும் சசிகலாவையும் இந்த ஆப்ஷனில் கோர்த்துவிட்டதுதான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி.
|
கைது
சசிகலா ஏற்கெனவே முதல்வராக தயார் நிலையில் இருந்த போதுதான் சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வருகிறார். இதில் பிரதமர் பதவி வேறயா என சசிகலா ஆதரவாளர்களின் மைன்ட் வாய்ஸ் கேட்கத்தான் செய்கிறது. இந்த கணிப்பு முடிவுகளை டேக் செய்து நித்யானந்தா பதில் அளித்துள்ளார். அதில் இந்தியாவுக்கு திரும்பி வரும் திட்டம் ஏதும் எனக்கு இல்லை. தமிழக மக்களை காப்பாற்றுவது எனக்கு முக்கியமானது என நித்தி தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications