நாட்டில் தடுப்பூசி வீணாக்கப்படுவது குறைகிறது.. இது நல்ல விஷயம்.. நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்!
டெல்லி: நாட்டின் கொரோனா பாதிப்பு பாசிட்டிவ் விகிதம் குறைந்துள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தடுப்பூசி வீணாக்கப்படுவதும் குறைகிறது.. இது மிகவும் நல்ல விஷயம் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- நாட்டின் கொரோனா பாசிடிவ் விகிதம் மே 10 அன்று 24.83 சதவீதத்தில் இருந்து மே 22 அன்று 12.45 சதவீதமாகக் குறைந்துள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பில் ஒட்டுமொத்த சரிவு காணப்பட்டாலும், 382 மாவட்டங்களில் பாஸிட்டிவ் விகிதம் இன்னும் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
கோவிஷீல்ட் தடுப்பூசி வீணானது மார்ச் 1-ம் தேதி 8 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகக் குறைந்துள்ளது, அதே வேளையில் கோவாக்சின் தடுப்பூசி வீணானது 17 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது ஒரு நல்ல அறிகுறியாகும். தடுப்பூசி செலுத்த, செலுத்த நாம் கொரோனானாவில் இருந்து விடுபட முடியும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications