கார்களுக்கு சுங்கச்சாவடி பாஸ்! தேதியை அறிவித்தது மத்திய அரசு! 3 ஆயிரம் கட்டினாலும் இப்படி ஒரு கண்டிஷனா?
டெல்லி: கார்களுக்கு சுங்கச்சாவடி பாஸ் ஆகஸ்ட் 15 முதல் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். இதன்படி, 3 ஆயிரம் ரூபாய் செலுத்தி பாஸ் வாங்கினால் 200 முறை சுங்கச்சாவடிகளை கடந்து செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் பயன்பாட்டு வாகனத்திற்கு மட்டுமே இது பொருந்தும்.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் எனப்படும் சுங்கச்சாவடிகள் உள்ளன. நாடு முழுவதும் 880க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச் சாவடிகளில் இரு சக்கர வாகனங்களை தவிர இதர வாகனங்கள் செல்வதற்கு சுங்கக் கட்டணம் செலுத்துவது அவசியம்.

சுங்கச்சாவடி கட்டணம்
தேசிய நெடுஞ்சாலைகளில் கார், பேருந்துகளில் செல்லும் போது அனைத்து வாகனங்களும் ஒரு சில வினாடிகள் நின்று பாஸ்ட் டேக் ஸ்கேன் ஆன பிறகு செல்வதை பார்த்து இருப்போம். இந்த பாஸ்ட் டேக் மூலமாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மிக்க நேரத்தில் சுங்கசாவடிகளில் இந்த பாஸ்ட் டேக் அடிப்படையில் கட்டணம் செலுத்தும் போது சில நிமிடங்கள் தாமதம் ஆனாலே வாகனங்கள் அணி வகுத்து நிற்பதை பார்க்க முடியும்.
சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பது மற்றும் நெரிசலை தவிர்க்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பயண தூரத்தின் அடிப்படையில் சுங்கச் சாவடி கட்டணம் வசூலிக்கும் முறை கொண்டு வருவது பற்றிய ஆலோசனையிலும் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது.
ஆகஸ்டு 15 முதல்
இதற்கிடையே, சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் செலுத்தினல் வருடம் முழுவதும் சுங்கச்சாவடிகளில் பயணிக்கும் வகையிலான திட்டத்தை விரைவில் மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில்தான், வருடத்திற்கு 3 ஆயிரம் செலுத்தி சுங்கச்சாவடிகளில் பயணிக்கும் முறை வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் இருந்து அமலாகும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நிதின் கட்காரி அறிவிப்பு
மத்திய நெடுஞ்சாலைத்தூறை அமைச்சர் நிதின் கட்காரி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளர். அவர் கூறியிருப்பதாவது: பாஸ்ட் டேக் அடிப்படையிலான ஆண்டு பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 3 ஆயிரம் செலுத்தி பயணிக்கும் வசதி வரும் ஆகஸ்ட் 15 முதல் அமல்படுத்தப்படும்.
ஓராண்டுக்கு 200 முறை பயணம் செய்து கொள்ளலாம். ஓராண்டு அல்லது 200 பயணங்கள் எது முதலில் வருகிறதோ அது வரை இது செல்லுபடியாகும். இந்த 3 ஆயிரம் செலுத்தி பாஸ் எடுக்கும் வசதி வணிக வாகனங்களுக்கு பொருந்தாது. கார்கள், ஜீப்கள், வேன்கள் போன்ற தனிநபர் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications