மத்திய அரசு வேலைக்கான பணியிடங்களை நிரப்ப எந்த தடையும் இல்லை.. சர்ச்சை பற்றி நிதி அமைச்சகம் விளக்கம்
டெல்லி: மத்திய அரசு நிறுவனங்களில் பணியிடங்களை நிரப்ப எந்த விதமான தடையும் விதிக்கப்படவில்லை, புதிய பொறுப்புகளை உருவாக்க மட்டுமே கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நேற்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு இருந்த உத்தரவு ஒன்றில், நாடு முழுக்க மத்திய அரசு நிறுவனங்களில் செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருந்தது. அவசர திட்டங்கள் மற்றும் பொருளாதார தேவைகளுக்காக செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

முக்கியமான திட்டங்களுக்கு செலவுகளை செய்ய வேண்டி உள்ளது. இதனால் மத்திய அரசு அலுவலகங்களில் செலவுகளை குறைக்க வேண்டும். புதியதாக பணி இடங்கள் எதையும் உருவாக்க கூடாது. மத்திய அரசின் அனுமதி இன்றி எந்த விதமான புதிய பணியிடங்களையும் உருவாக்க கூடாது என்று அரசு இதில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு பெரிய விவாதங்களை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி பலர் இது குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர். மத்திய பாஜக அரசு தனியாருக்கான அரசு போல செயல்படுகிறது. கொரோனாவை காரணம் காட்டி அரசு அலுவலகங்களை மூடி, இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது என்று ராகுல் காந்தி இது தொடர்பாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சகம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது. அதில், நேற்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு புதிய வேலை வாய்ப்பு மற்றும் பணியிட நிரப்புதலை தடுக்காது. எப்போதும் போல மத்திய அரசு பணிகளுக்கு ஆள் எடுக்கும் பணிகள் நடக்கும்.
அலுவலகங்களுக்கு உள்ளே புதிய பொறுப்புகளை உருவாக்க கூடாது. அதன் மூலமாக செலவுகளை அதிகரிக்க கூடாது என்று மட்டுமே அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறோம். பணியிடங்களை நிரப்ப தடை எதுவும் இல்லை. எப்போதும் போல யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி போன்ற தேர்வுகள் மூலம் பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications