கொரோனா 3ம் அலையில்.. குழந்தைகள் பாதிப்படைவார்கள் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.. எய்ம்ஸ் இயக்குனர்
டெல்லி: கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டால் அதில் குழந்தைகள்தான் அதிகம் பாதிப்படைவார்கள் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை, என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக மோசமாக தாக்கி, தற்போது ஓய்ந்து உள்ளது. தினசரி கேஸ்கள் மே மாதத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான நிலையில் தற்போது ஒன்றரை லட்சத்திற்கும் குறைவான கேஸ்கள்தான் பதிவாகிக்கொண்டு இருக்கிறது.
இந்தியாவில் இரண்டாம் அலை முடிந்துள்ள நிலையில், மூன்றாம் அலை விரைவில் தொடங்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

மருத்துவமனை
இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், மூன்றாம் அலை கொரோனா குழந்தைகளை மட்டும் தாக்கும் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்பதற்கும் ஆதாரம் இல்லை.

இரண்டாம் அலை
இந்தியாவில் ஏற்பட்ட முதல் அலை, இரண்டாம் அலையை எடுத்துக்கொண்டாலும் சரி. உலகம் முழுக்க வந்த கொரோனா டேட்டாக்களை எடுத்துக்கொண்டாலும் சரி. எதிலும், எந்த வகையான கொரோனாவும் குழந்தைகளை அதிகம் பாதித்ததாக டேட்டா இல்லை.
Recommended Video

இம்யூனிட்டி
இந்தியாவில் இரண்டாம் அலை மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 60-70% பேருக்கு உடலில் ஏற்கனவே ஏதாவது நோய் இருந்திருக்கிறது. அல்லது இம்யூனிட்டி மிக குறைவாக இருந்திருக்கிறது. சில குழந்தைகள் கீமோ தெரபி சிகிச்சை எடுத்துள்ளனர். இவர்களை தவிர மற்ற குழந்தைகளை பெரிதாக பாதிக்கவில்லை.

டிஸ்சார்ஜ்
அப்படியே பாதிக்கப்பட்ட குழந்தைகள் கூட மருத்துவமனையில் சேராமல் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.
இந்த வைரஸ் வேகமாக மாற்றம் அடைகிறது. இதனால் இதன் குணாதிசியங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் மூன்றாவது அலையில் குழந்தைகள்தான் அதிகம் பாதிப்படைவார்கள் என்பதற்கு சான்று எதுவும் இல்லை, என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications