கால்வன் பள்ளத்தாக்கு மோதல்- புலனாய்வுத் துறை தோல்வி இல்லை: அனைத்து கட்சி கூட்டத்தில் ராஜ்நாத்சிங்
டெல்லி: லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கு மோதல் விவகாரத்தில் புலனாய்வுத்துறை தோல்வி அடைந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக் மறுத்துள்ளார்.
கால்வன் பள்ளத்தாக்கு மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். தேசத்தை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது சீனாவின் இந்த தாக்குதல்.

மோடியின் அனைத்து கட்சி கூட்டம்
இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், இடதுசாரி தலைவர்கள் ராஜா, யெச்சூரி, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சோனியா சரமாரி கேள்வி
இதில் பேசிய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, புலனாய்வுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா? என சரமாரி கேள்வி எழுப்பினார். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுக்குள் சீனா ஊடுருவவும் இல்லை- எந்த நிலையையும் கைப்பற்றவும் இல்லை எனவும் விளக்கம் அளித்தார்.

ராஜ்நாத்சிங் திட்டவட்டம்
இக்கூட்டத்தில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், கால்வன் பள்ளத்தாக்கு மோதல் விவகாரத்தில் புலனாய்வுத் துறைக்கு தோல்வி இல்லை. இதில் புலனாய்வுத் துறை சரியாகவே செயல்பட்டது என விளக்கம் அளித்திருக்கிறார் என கூறப்படுகிறது.

காஷ்மீர்- ராணுவம் விளக்கம்
இதனிடையே எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் ப்பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களுக்கும் சீனாவுடனான எல்லை மோதல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ராணுவம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications