முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் தரக் கூடாது.. முக்கிய விஷயத்தை கூறி இந்து மகாசபை சீராய்வு மனு
டெல்லி: முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் தரக் கூடாது என அயோத்தி தீர்ப்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்கிறது இந்து மகாசபை.
70 ஆண்டு கால அயோத்தி வழக்கை கடந்த நவம்பர் 9-ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புவாய்ந்த தீர்ப்பை அளித்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.

அதில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் இந்துக்களுக்கு சொந்தமானது என்றும் அங்கு ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்படுவதாகவும் தீர்ப்பு வழங்கியது. மேலும் முஸ்லிம்களுக்கு உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியிலோ அல்லது சன்னி வக்பு வாரியம் சுட்டிக் காட்டும் இடத்திலோ 5 ஏக்கர் இடத்தை மசூதி கட்ட கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உள்பகுதியும் வெளிப்பகுதியும் இந்துக்களுக்கே சொந்தமானது. எனவே முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் கொடுக்க வேண்டியதற்கான காரணம் ஏதும் இல்லை என இந்து மகாசபை கூறுகிறது.
இதையடுத்து தனது தீர்ப்பை மறுசீராய்வு செய்ய கோரி இந்து மகாசபை அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படுகிறது. தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்களில் இது 7-ஆவது மனுவாகும். அதிலும் இந்துக்கள் சார்பில் தாக்கல் செய்யப்படும் முதல் சீராய்வு மனு. ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட 6 சீராய்வு மனுக்களும் முஸ்லிம்கள் தாக்கல் செய்ததாகும்.
இந்திய முஸ்லிம் தனிநபர் வாரியம் சார்பில் மவுலானா முஃப்தி ஹல்புல்லா, மவுலானா மஹ்ஃபூசூர் ரஹ்மான், மிஸ்பாஹுதீன், முகமது உமர், ஹாஜி நஹ்பூப் ஆகிய 5 பேர் இதுவரை மறுசீராய்வு தாக்கல் செய்திருந்த நிலையில் 6-ஆவதாக முகமது ஆயூப் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இன்று இந்த சீராய்வு மனுவை இந்து மகாசபையின் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் தாக்கல் செய்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications