மத்திய அரசு ஊழியர்களை முன்கூட்டியே ஓய்வுபெறச்செய்யும் திட்டம் உள்ளதா.. மத்திய அரசு விளக்கம்
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களை முன்கூட்டியே ஓய்வுபெறச்செய்யும் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என்று நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் எம்பிக்கள் கேள்வி நேரத்தின் போது கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த மத்திய அரசின் பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், மத்திய அரசு ஊழியர்களை முன்கூட்டியே ஓய்வுபெறச்செய்யும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று தெரிவித்தார்.
தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் தாமாக முன்வந்து ஓய்வு பெற அனுமதிக்கும் புதிய வழிகாட்டுதல் இடம் பெற்றுள்ளன. ஒரு மத்திய அரசு ஊழியர் இருபது ஆண்டுகள் வழக்கமான சேவையை முடித்த பிறகு, எந்த நேரத்திலும், நியமன அதிகாரிக்கு எழுத்துப்பூர்வமாக மூன்று மாதங்களுக்குக் குறையாமல் அறிவிப்பு கொடுத்து, பணியில் இருந்து ஓய்வு பெறலாம் என்று இருக்கிறது.

நியமன அதிகாரி மூன்று மாத காலத்திற்குள் ஓய்வு கோரிக்கையை நிராகரிக்கவில்லை என்றால், ஓய்வூதியம் அங்கீகரிக்கப்படும். முன்கூட்டியே தாங்களாக ஓய்வு பெற்றவர்கள் வழக்கமான ஓய்வு பெறும் வயதில் ஓய்வு பெறுபவர்களைப் போன்ற பலன்களைப் பெறத் தகுதியுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
முன்கூட்டியே ஓய்வு:
இந்த நிலையில் நாடாளுமன்ற ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின்போது, "மத்திய அரசு ஊழியர்களை முன்கூட்டியே ஓய்வுபெறச்செய்யும் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா? அதை அமல்படுத்தினால், ஊழியர்கள் மீது ஏற்படும் தாக்கம் என்ன?" என்று எம்பிக்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், "இல்லை. அப்படி ஒரு திட்டம் பரிசீலனையில் இல்லை. நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் ஊழியர்கள், முன்கூட்டியே ஓய்வுபெற அனுமதி கோரலாம்" என்று கூறினார்.
எஸ்சி எஸ்டி மத்திய அரசு பணியாளர்கள்:
இதனிடையே மத்திய அரசு பணியாளர்கள் தேர்வில் எஸ்சி எஸ்டி பிரதிநிதித்துவம் மற்றும் ஒபிசி பிரதிநிதித்துவம் தொடர்பான மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், "மத்திய அரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரதிநிதித்துவம் 15 சதவீதம் மற்றும் 7.5 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்ட அளவுப்படி நிரப்பப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்டோர் பிரதிநிதித்துவம் 27 சதவீதத்துக்கு மேல் உள்ளது.
மத்திய அரசு ஓபிசி பணியாளர்கள்:
கடந்த 2024 ஜனவரி 1-ந் தேதிப்படி, எஸ்.சி. சமுதாயத்தை சேர்ந்த 5 லட்சத்து 47 ஆயிரம் ஊழியர்களும், எஸ்.டி. சமுதாயத்தை சேர்ந்த 2 லட்சத்து 82 ஆயிரம் ஊழியர்களும், இதர பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தைர்ந்த 8 லட்சத்து 55 ஆயிரம் ஊழியர்களும் பணியாற்றி வருகிறார்கள். காலியிடங்களை நிரப்புவது தொடர்ச்சியான பணியாக நடந்து வருகிறது என்று கூறினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications