தேர்தல்களில் 65 வயது மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் ஓட்டு போட முடியாது: தேர்தல் ஆணையம்
டெல்லி: பீகார் மாநில சட்டசபை தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் வாக்கு அளிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
243 எம்.எல்.ஏக்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. பீகாரில் அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தற்போதைய கொரோனா பாதிப்பை முன்வைத்து இந்த தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்கிற விவாதமும் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் தேர்தல் தொடர்பான பணிகளை அரசியல் கட்சிகள் ஜரூராக மேற்கொண்டும் வருகின்றன.
இந்நிலையில் பீகார் உள்ளிட்ட இனிவரும் தேர்தல்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இதனைத் தொடர்ந்து 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்பதை நிறுத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு பிந்தைய தேர்தல்களில் நாடு முழுவதும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
ஒரு வாக்குச் சாவடியில் அதிகபட்சமாக 1,000 பேர்தான் வாக்களிக்கலாம். பீகாரில் இதற்கேற்ப 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட இருக்கின்றன. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே பார்முலா கடைபிடிக்கப்பட உள்ளது.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
பீகார் முசாபர்பூர் மருத்துவமனையில் அதிகாலை தீ விபத்து.. 10 பேர் பலி.. ICU-வில் நடந்த கொடூரம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications