"சின்ன ஆதாரம் கூட கொடுக்கவில்லை".. கனடா ட்ரூடோவை வளைத்த இந்தியா.. வெளியுறவுத்துறை பரபர அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கனடா குற்றச்சாட்டு தொடர்பாக எந்த ஆதாரத்தையும் எங்களிடம் வழங்கவில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது. ட்ரூடோ குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக எதுவும் எங்களிடம் கொடுக்கப்படவில்லை, ஆதாரம் ஏதேனும் கொடுக்கும் பட்சத்தில் இதில் விசாரணை செய்ய தயாராக இருக்கிறோம் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரை இந்திய அரசு கொன்றது என்று ட்ரூடோ குற்றச்சாட்டு வைத்து உள்ளதால் இரண்டு நாட்டு உறவு முறியும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் தேடப்பட்டு வந்த நிஜ்ஜார், ஜூன் 18 அன்று, கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

No specific information has been shared by Canada Khalistani extremists case: MEA

1990-களின் பிற்பகுதியில் கனடாவுக்குச் சென்ற நிஜ்ஜார், 2020-ல் இந்தியாவால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். கனடா, பிரதமர் ட்ரூடோ, இந்த கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கியமாக காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

.கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது நமது இறையாண்மையில் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம்.

இந்தியா இது தொடர்பான விசாரணையில் ஒத்துழைக்க வேண்டும். இதில் உண்மையை கொண்டு வர வேண்டும். நாங்கள் இது பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம். இதனால் இந்தியா கனடா இடையிலான உறவு முறியும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. னடா குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம் மற்றும் மறுப்பு வெளியிட்டு உள்ளது.

வெளியேற்றம்: இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான கனடா பிரதமர் ட்ரூடோவின் கருத்துக்களைத் தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரி பவன் குமார் ராயை கனடா வெளியேற்றியதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முதல்முறையாக கனடா இந்தியாவின் வெளியுறவுத்துறை தூதரக அதிகாரியை இப்படி வெளியேற்றி உள்ளது.

இதனால் இரண்டு நாட்டு உறவு முறியும் அபாயம் உள்ளது. இதனால் இந்தியாவும் கனடாவின் வெளியுறவுத்துறை தூதரக அதிகாரியை வெளியேற்றி உள்ளது.

No specific information has been shared by Canada Khalistani extremists case: MEA

ஆதாரம் இல்லை: இந்த நிலையில்தான் : கனடா குற்றச்சாட்டு தொடர்பாக எந்த ஆதாரத்தையும் எங்களிடம் வழங்கவில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.

ட்ரூடோ குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக எதுவும் எங்களிடம் கொடுக்கப்படவில்லை, ஆதாரம் ஏதேனும் கொடுக்கும் பட்சத்தில் இதில் விசாரணை செய்ய தயாராக இருக்கிறோம். இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆதாரம் தந்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும், என்று இந்தியா தெரிவித்துள்ளது.

உளவு பார்த்தா?: இந்தியாவிற்கு எதிரான கனடா பிரதமர் ட்ரூடோவின் குற்றச்சாட்டிற்கு பின் கனடா இந்திய அதிகாரிகளை உளவு பார்த்து இருக்கலாம் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. கனடா உளவு பார்த்து அதன் மூலம்ஸ் சேகரித்த உளவு தகவல்களின் அடிப்படையில்தான் இந்தியாவை குற்றஞ்சாட்டுவதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் ரா அதிகாரி பவன் குமார் ராய் உள்ளிட்டோரை கனடா உளவு பார்த்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

காலிஸ்தானியுடன் தொடர்புடைய தீவிரவாதத் தலைவரைக் கொன்றதில் இந்தியாவின் பங்கு பற்றிய கனடாவில் குற்றச்சாட்டு உளவு அடிப்படையிலானது என்கிறார்கள். கனடாவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளை உளவு பார்த்து கனடா சில தகவல்களை திரட்டி இருக்கலாம் என்று AP செய்தி நிறுவனம் கூறியுள்ளது. முக்கியமாக கனடாவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளை நேரடியாக உளவு பார்த்து, அவர்களின் போன்களை டேப் செய்து, இந்த புகார்களை கனடா வைக்கலாம் என்று அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+