இந்தியாவில் புகுந்த புதிய வகை "ஓமிக்ரான் XE".. எந்தளவு ஆபத்தானது? விளக்குகிறார் டாப் ஆய்வாளர் அரோரா
டெல்லி: இந்தியாவில் ஓமிக்ரான் XE பரவ தொடங்கி உள்ள நிலையில், இது குறித்து தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் என்.கே. அரோரா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கடந்த 2019 இறுதியில் முதலில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதன் பின்னர் உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த கொரோனா மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், அதைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாகவே உள்ளது

சீனா
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா முதல் அலையை ஏற்படுத்தியது என்றால், அதன் பின்னர் ஆல்பா, டெல்டா மற்றும் ஓமிக்ரான் ஆகிய உருமாறிய கொரோனா வகைகள் அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தின. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா உலகெங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அதேபோல உலகின் பல நாடுகளிலும் டெல்டா கொரோனா மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.

புதிய வகை ஓமிக்ரான்
அதேநேரம் கடைசி அலையை ஏற்படுத்திய ஓமிக்ரான் கொரோனா பெரும்பாலும் லேசான பாதிப்பையே ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இதனால் வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்த போதிலும், தீவிர பாதிப்பும் உயிரிழப்பும் குறைவாகவே இருந்தது. இந்தச் சூழலில் உலக சுகாதார அமைப்பு XE என்ற புதிய வகை கொரோனா குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ஒமிக்ரான் BA.2 வகையை விட சுமார் பத்து சதவீதம் வேகமாகப் பரவும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஹைபிரிட் வேரியண்ட்
இந்த புதிய XE உருமாறிய கொரோனா என்பது BA.1 மற்றும் BA.2 ஆகிய இரண்டு உருமாறிய கொரோனாவின் ஹைபிரிட் வேரியண்ட் ஆகும். இந்த புதிய வகை ஓமிக்ரான் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது. இதற்கிடையே மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களிலும் சிலருக்கு இந்த புதிய ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து, இப்போது தான் இயல்பு நிலை மெல்லத் திரும்பு நிலையில், இத்தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முக்கிய தகவல்
இந்நிலையில், புதிய XE வகை ஓமிக்ரான் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஓமிக்ரான் எக்ஸ் வகை கொரோனா பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை என்றும் குறைவான நபர்களுக்கே வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் என்.கே. அரோரா குறிப்பிட்டார்.

ஆபத்தானதா
ஆபத்தானதா இது தொடர்பாக என்.கே அரோரா மேலும் கூறுகையில், "ஓமிக்ரான் கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. பல புதிய ஓமிக்ரான் வகைகள் உருவாகி வருகிறது. வரும் காலத்திலும் ஓமிக்ரான் தொடர்ந்து உருமாறும். ஆனால், இதற்காக நாம் அச்சப்படத் தேவையில்லை. அதேபோல இந்தியாவில் உள்ள தரவுகளை வைத்துப் பார்க்கும் போது இந்த ஓமிக்ரான் XE மிக வேகமாகப் பரவுவதை நிரூபிக்க எந்தவொரு ஆதாரமும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

புதுப்புது வகை
முன்னதாக, மும்பையில் ஒருவருக்கு இந்த ஓமிக்ரான் XE வகை கண்டறியப்பட்டது. 2 டோஸ் வேக்சின் போட்டுள்ள 67 வயதான முதியவர் ஒருவருக்கு ஓமிக்ரான் XE உறுதி செய்யப்பட்டது. அதேபோல குஜராத் மாநிலத்திலும் ஒருவருக்கு இந்த ஓமிக்ரான் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே ஓமிக்ரான் எக்ஸ்எம் (XM) வகையும் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கண்டறியப்பட்டது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications