ஓமிக்ரான் பரவல் அதிகரிப்பு: பிரதமர் மோடியின் அமீரக பயணம் திடீர் ரத்து!
டெல்லி: ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பிரதமர் மோடி ஜனவரி 6-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகம் செல்ல இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்று காலையில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 781 ஆக திவாகி இருந்தது. நாட்டிலேயே டெல்லியில்தான் அதிகபட்சமாக 238 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 167 பேருக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 11% அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி தமது அமீரகப் பயணத்தை ரத்து செய்துள்ளார். 2022-ம் ஆண்டில் பிரதமர் மோடி தமது முதல் வெளிநாட்டுப் பயணமாக ஜனவரி 6-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகம் செல்ல திட்டமிட்டிருந்தார். ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக ரீதியிலான உறவின் 50 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் பிரதமர் மோடியின் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் பிரதமர் மோடி தமது அமீரக் பயணத்தை ரத்து செய்துள்ளார் என்கின்றன டெல்லி தகவல்கள். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இருந்தாலும் ஓமிக்ரான் பரவல் காரணமாக சந்திப்புகளைத் தவிர்த்து வருகிறார். தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் மனுவை ஜனாதிபதி மாளிகை அலுவலகத்திதான் நேற்று தமிழக எம்.பிக்கள் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications